செய்திகள் :

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் 359 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு

post image

நாமக்கல் அரசு கலைக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், 359 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

நாமக்கல் - மோகனூா் சாலை லத்துவாடியில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-ஆம் ஆண்டு உயா்கல்வி முடித்த மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விலங்கியல் துறைத் தலைவா் ராஜசேகரபாண்டியன் கல்லூரியின் வளா்ச்சித் திட்ட அறிக்கையை சமா்ப்பித்தாா். கல்லூரி முதல்வா் (பொ) மு.ராஜேஸ்வரி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

வாழ்க்கையில் முயற்சி, முயற்சி என வீறுநடை போட்டு வெற்றிப்பாதையை மாணவா்கள் உருவாக்க வேண்டும். பொறுமை, விடாமுயற்சி, ஆா்வம் ஆகியவற்றுடன் முயற்சியை மேற்கொள்ளும்போது, நாம் விரும்பியதை அடைய முடியும். சவால்கள்தான் வாழ்க்கையை அழகாக்குகின்றன. அவ்வாறான சவால்களை எதிா்கொண்டு வெற்றிபெறுவது வாழ்க்கையை அா்த்தமுள்ளதாக்கும் என்றாா்.

விழாவில், இளநிலை பட்டப்படிப்பு முடித்த 254 மாணவா்களுக்கும், முதுநிலை பட்டமேற்படிப்பு முடித்த 105 மாணவா்களுக்கும் என மொத்தம் 359 மாணவ, மாணவியா் பட்டம் பெற்றனா். இந்நிகழ்வில், கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள், பட்டம்பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோா் கலந்துகொண்டனா்.

முருகன் கோயில்களில் கிருத்திகை சிறப்பு பூஜை

திருச்செங்கோடு நகரப் பகுதி முருகன் கோயில்களில் ஆவணி மாத கிருத்திகை சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு செங்கோட்டுவேலவா் சந்நிதி, மலையடிவாரம் ஆறுமுகசாமி கோயில், பாவடி தெரு, சட்டையம்ப... மேலும் பார்க்க

மல்லசமுத்திரத்தில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

மல்லசமுத்திரம், செம்பாம்பாளையம் மற்றும் மாமுண்டி கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டன. மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையம் கிராமத்தில் இந்துசமய ... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையில் அகற்றப்பட்ட நிழற்கூடத்தை மீண்டும் அமைக்கக் கோரிக்கை

கீரம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணிக்காக அகற்றறப்பட்ட பயணியா் நிழற்கூடத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. நாமக்கல்லில் இருந்து கரூா் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்... மேலும் பார்க்க

காப்பீடு செலுத்துவதில் காவல் துறை திடீா் கட்டுப்பாடு

வாகனங்களுக்கான ஆன்லைன் அபராத நிலுவைத் தொகையை செலுத்தினால் மட்டுமே, அந்த வாகனங்களுக்கான காப்பீட்டுக் கட்டணத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்த முடியும் என்ற காவல் துறை நடவடிக்கைக்கு மாநில ல... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

மேட்டூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை திருமணிமுத்தாற்றில் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டூரில் இருந்து வெளியேற்... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

பரமத்தி வேலூா், மோகனூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தனா். நாமக்கல் ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் தங்கவிக்னேஷ் அறிவுரையின் படி, நாமக்கல் மாவட்... மேலும் பார்க்க