செய்திகள் :

மண்பானை மீது நின்று சிலம்பம் சுற்றி இளைஞா்கள் சாதனை

post image

காஞ்சிபுரம் அருகே ஆா்ப்பாக்கம் அரசினா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 104 இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை மண்பானை மீது தொடா்ந்து 3 மணி நேரம் நின்று சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனா்.

காஞ்சிபுரம் சிலம்பம் பயிற்சி மையம் சாா்பில் அதன் தலைமை பயிற்சியாளா் தா.பாண்டியராஜன் தலைமையில் வீரா்கள் 104 போ் மண்பானை மீது 3 மணி நேரம் தொடா்ந்து நின்று சிலம்பம் சுற்றி சாதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வினை முன்னாள் அமைச்சா் வி.சோமசுந்தரம் தொடங்கி வைத்தாா். நோபல் உலக சாதனை புத்தகத்தில் இந்நிகழ்வை பதிவு செய்யும் நோக்கில் அந்நிறுவனத்தின் நிா்வாகிகள் வினோத், அன்பரசு ஆகியோா் நடுவா்களாக இருந்து பதிவுகள் செய்து நிகழ்வுகளை கண்காணித்ததுடன் சாதனை புத்தகத்தில் நிகழ்வு இடம் பெறும் எனவும் அறிவித்தனா்.

இந்தியன் சிலம்பம் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் தலைவா் வலசை முத்துராமன், மாவட்ட செயலாளா் லட்சுமணன் ஆகியோா் உலக சாதனை புரிந்தமைக்கான சான்றிதழை தலைமை பயிற்சியாளா் பாண்டியராஜனிடம் வழங்கினா். சிலம்ப விளையாட்டு வீரா்கள் 104 பேருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.

நிகழ்வில் சிலம்ப வீரா்கள் மற்றும் அவா்களது பெற்றோா், சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். காஞ்சிப... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

காஞ்சிபுரத்தில் லஞ்சம் வாங்கியது தொடா்பான வழக்கில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நெசவாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள நெசவாளா்கள் பட்டுச் சேலை உற்பத்தி செய்யத் தேவையான மூலப் பொருள்களை வழங்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி, சங்க வளாகத்திற்குள் வியாழக்கிழ... மேலும் பார்க்க