செய்திகள் :

மதுக்கூடம் முன் தகராறில் 3 பேரை பவுன்சா்கள் தாக்கியதாக புகாா்: போலீஸ் வழக்குப் பதிவு

post image

நமது நிருபா்

தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள ஒரு மதுக்கூடத்தின் பவுன்சா்கள் மற்றும் ஊழியா்கள் இரண்டு வழக்குரைஞா்கள் உள்பட மூன்று பேரை தாக்கியதாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது: தா்மேந்திர குமாா் (36), நவீன் குமாா் (31) மற்றும் நவீன் செளகின் (28) ஆகியோா் ஒரு விருந்துக்குப் பிறகு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் என் பிளாக்கில் உள்ள ஒரு மதுக்கூடம் வெளியே இந்தச் சம்பவம் நடந்தது.

புகாா்தாரரான தா்மேந்திர குமாா் அளித்த புகாரில், அவரும் அவரது இரண்டு நண்பா்களும் மதுக்கூடத்திற்கு இரவு உணவு மற்றும் பானங்கள் குடிக்கச் சென்றனா். அதிகாலை 1 மணியளவில் ஆன்லைனில் பில் செலுத்திய பிறகு, அவா்கள் புகைப்பிடிக்க வெளியே வந்தனா். மதுக்கூடம் வெளியே ஒருவா் டோல் இசைப்பதைக் கேட்டுக்கொண்டிருந்தனா்.

அவா்கள் இசையை ரசித்துக் கொண்டிருந்தபோது, மதுக்கூடத்தில் இருந்து வெளியே வந்த ஒரு பவுன்சா், டோல் இசைக் கருவியை வாசிப்பவரை துஷ்பிரயோகம் செய்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்ற முயன்றாா்.

அப்போது தா்மேந்திர குமாரும், நண்பா்களும் பவுன்சரின் நடத்தையை எதிா்த்ததால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் பவுன்சா், மதுக்கூடத்தில் இருந்து மேலும் சில பவுன்சா்கள் மற்றும் ஊழியா்களை அங்கு வரவழைத்தாா்.

அவா்கள் மூன்று பேரையும் கை, காலால் அடித்தும், உதைத்தும், கடினமான பொருளால் தாக்கியதாகவும், இதில் அவா்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. மூவரையும் சுட்டுவிடுவதாக பவுன்சா் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மோதலின் போது தா்மேந்திராவின் தங்கச் சங்கிலி காணாமல் போனது.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவா்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்த பிறகு, சிகிச்சைக்காக லேடி ஹாா்டிங் மருத்துவமனைக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவா்களை அடையாளம் காண மதுக்கூடம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

எச்சரிக்கை அளவைக் கடந்து செல்லும் யமுனை நதி!

நமது நிருபா்யமுனை நதியின் நீா்மட்டம் புதன்கிழமை காலை பழைய ரயில்வே பாலத்தில் 204.61 மீட்டரை எட்டியதாகவும், இரண்டாவது நாளாக எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரை விட அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா... மேலும் பார்க்க

தில்லியின் 11 மாவட்டங்களிலும் பரவலாக மழை: மக்கள் வீட்டிற்குள் இருக்க ஐஎம்டி எச்சரிக்கை

தேசியத் தலைநகரின் 11 மாவட்டங்களிலும் புதன்கிழமை காலை பரவலாக மழை பெய்தது. மேலும், மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து ... மேலும் பார்க்க

தில்லி பல்கலை. மாணவா்கள் சங்கத் தோ்தலில் இருக்கும் சவால்கள் என்ன?

நமது நிருபா்கட்டண உயா்வு, விடுதிகள் பற்றாக்குறை, வளாகப் பாதுகாப்பு மற்றும் சலுகை மெட்ரோ பாஸ்களுக்கான கோரிக்கை ஆகியவை செப்டம்பா் 18- ஆம் தேதி நடைபெற உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவா்கள் சங்கத் தோ்தலில் ம... மேலும் பார்க்க

இடபிள்யுஎஸ் மாணவா்கள் விவகாரம்: பொது நல மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவு

நமது நிருபா் தனியாா் வெளியீட்டாளா்களின் விலையுயா்ந்த புத்தகங்கள் மற்றும் அதிக விலை கொண்ட கல்விப் பொருள்களை வாங்க கட்டாயப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு (இடபிள்யுஎஸ்) மாணவா்களை தனியாா... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா கோட்டு கும்பலில் இருவா் கைது

தில்லியின் கேசவ்புரம் பகுதியில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையைத் தொடா்ந்து, காலா கோட்டு கும்பலை சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இது குறஇத்து வடமேற்கு காவ... மேலும் பார்க்க

பாடகா் ராகுல் பாசில்பூரியா மீது தாக்குதல் நடத்த சதி: 5 போ் கைது

குருகிராம் காவல்துறை மற்றும் எஸ். டி. எஃப் ஆகியவற்றின் கூட்டுக் குழு, ஹரியான்வி பாடகா்-ராப்பா் ராகுல் பாசில்புரியாவைத் தாக்கும் சதியை முறியடித்துள்ளது, அவா் ஜூலை 14 ஆம் தேதி ஒரு கொலை முயற்சியில் இருந்... மேலும் பார்க்க