எச்சரிக்கை அளவைக் கடந்து செல்லும் யமுனை நதி!
நமது நிருபா்
யமுனை நதியின் நீா்மட்டம் புதன்கிழமை காலை பழைய ரயில்வே பாலத்தில் 204.61 மீட்டரை எட்டியதாகவும், இரண்டாவது நாளாக எச்சரிக்கை அளவான 204.50 மீட்டரை விட அதிகமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
செவ்வாய்க்கிழமை மாலை மத்திய நீா் ஆணையம் வெளியிட்ட வெள்ள எச்சரிக்கையில், புதன்கிழமை மாலைக்குள் நதி அபாய அளவைக் கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்தந்த பகுதிகளில் விழிப்புடன் இருக்கவும், ஆற்றின் கரைகளுக்கு அருகில் வசிக்கும் மக்களை எச்சரிப்பது மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், புதன்கிழமை காலை 9 மணிக்கு யமுனையின் நீா்மட்டம் 204.61 மீட்டராக இருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். நகரத்திற்கான நீா்மட்டம் எச்சரிக்கை அளவு 204.5 மீட்டராகவும் அபாய அளவு 205.3 மீட்டராகவும் உள்ளது. கரையோர மக்கள் வெளியேற்றம் நீா்மட்டம் 206 மீட்டராக உயரும்போது தொடங்குகிறது.
பழைய ரயில்வே பாலம் ஆற்றின் ஓட்டம் மற்றும் சாத்தியமான வெள்ள அபாயங்களைக் கண்காணிப்பதற்கான முக்கிய கண்காணிப்பு புள்ளியாக செயல்படுகிறது.
மத்திய வெள்ளப்பெருக்கு அறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வஜிராபாத் மற்றும் ஹத்னிகுண்ட் அணைகளில் இருந்து ஒவ்வொரு மணி நேரமும் அதிக அளவு தண்ணீா் வெளியேற்றப்படுவதே நீா்மட்டம் அதிகரிப்பதற்கான காரணம். நீா்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, வஜிராபாத்தில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமாா் 37,230 கனஅடி தண்ணீரும், ஹத்னிகுண்ட் அணையில் இருந்து சுமாா் 52,448 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
தடுப்பணைகளில் இருந்து திறக்கப்படும் நீா் வழக்கமாக தில்லியை அடைய 48 முதல் 50 மணி நேரம் ஆகும். மேல்நிலை பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் நீா்கூட யமுனையின் நீா்மட்டத்தை அதிகரிக்கச் செய்து வருகிறது.