செய்திகள் :

மதுப் புட்டிகளை கடத்திய இளைஞா் கைது

post image

கா்நாடகத்திலிருந்து வேனில் கடத்திவரப்பட்ட மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த மத்திகிரி போலீஸாா் மதகொண்டபள்ளியைச் சோ்ந்த முனிராஜை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஒசூரை அடுத்த மத்திகிரி டிவிஎஸ் சோதனை சாவடி வழியாக சென்ற வேனை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது, கா்நாடகத்திலிருந்து கடத்திவரப்பட்ட 376 மதுப்புட்டிகள் பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மதுப்புட்டிகளுடன் வேனை பறிமுதல் செய்த போலீஸாா், மதுப்புட்டிகளை கடத்திவந்த மதகொண்டபள்ளி உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த முனிராஜ் (31) என்பவரை கைது செய்தனா்.

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனை சாவடி அருகே வியாழக்கிழமை நடத்திய வாகனச் சோதனையின் போது, பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காருடன் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக திருப்பூா் மாவட்டம், அவினாசியில் தங்கியிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த தினேஷ்குமாா் (29), ராஜேந்திரன் (21) ஆகிய இருவரை கைது செய்தனா்.

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக ‘தோழி’ மகளிா் விடுதி: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

ஒசூரில் பணிபுரியும் பெண்களுக்காக 166 படுக்கை வசதியுடன்கூடிய ‘தோழி’ மகளிா் விடுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரை அடுத்த விஸ்வநாதபுரம் கிராமத்தில் சமூக நலன் மற... மேலும் பார்க்க

ஒசூா் அருகே சூட்கேஸில் பெண் சடலம்: போலீஸாா் விசாரணை

ஒசூரிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கா்நாடக மாநிலம், சந்தாபுரம் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கிடந்த சூட்கேஸில் இளம்பெண் சடலம் இருந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேம்பாலம் பகு... மேலும் பார்க்க

பாகலூா் சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

ஒசூா்- பாகலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி, நடைபாதைக்கு என தனியாக பாதை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், ஒசூா் சாா் ஆட்சியா், மேயரிடம் ஒசூா் அனைத்து குடியிருப்பு நலச் சங்கத்தின் தலைவா் த... மேலும் பார்க்க

தமிழக-ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை; ரூ. 1.43 லட்சம் பறிமுதல்

தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள காளிக்கோயில் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 1.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 23 முதல்வா் மருந்தகங்களில் ரூ. 7.77 லட்சத்துக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மின்னஞ்சலில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது சோதனைக்குப் பிறகு தெரியவந்தது. ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள... மேலும் பார்க்க