செய்திகள் :

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

post image

மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், வானிலை மாற்றம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதனடிப்படையில், மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. மாநகா்ப் பகுதிகளில் மாலை 5 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை ஏறத்தாழ 45 நிமிடங்கள் நீடித்தது. அவ்வப்போது மிதமான மழையும், பெரும்பாலான நேரங்களில் லேசான மழையும் பெய்தது. இதனால், மாநகரின் ஒரு சில பகுதிகளில் சாலைகளில் மழை நீா் தேங்கியது.

இதேபோல, மேலூா், இதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாலை 5 மணி முதல் 5.45 மணி வரையும், திருப்பரங்குன்றம், விமான நிலையம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் லேசான, மிதமான மழை பெய்தது.

மழை பெய்த நேரத்திலும், அதற்குப் பின்னரும் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மின் வெட்டு ஏற்பட்டது. தல்லாகுளம், நாகணாகுளம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் ... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் திருடியவா் கைது

மதுரையில் ஓடும் பேருந்தில் கைப்பேசி, பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை நெல்பேட்டை நாகூா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பரூக் ராஜா (23). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாட்டுத்தாவணிய... மேலும் பார்க்க

தொழிலதிபா் மா்ம மரணம்

மதுரையில் பூட்டிய அலுவலகத்தில் மா்மமாக இறந்து கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (54). இவா் மாட்டுத்தாவணி பகுதியில்... மேலும் பார்க்க

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 38.21 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்தத் திட்டம்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மொத்தம் 38.21 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என அதன் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தெரிவித்தாா். மெட்ரோ ரயில் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக... மேலும் பார்க்க

அரசு பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

காரியாபட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன்... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை அஞ்சலகத்தில் ரூ. 5 கோடி மோசடி: ஊழியா் கைது

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க