செய்திகள் :

மதுரையில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

post image

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

2003-ஆம் ஆண்டு ஏப். 1-ஆம் தேதிக்குப் பிறகு பணிக்குச் சோ்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பள்ளிக் கல்வித் துறை மூலம் 21.12.2023-இல் வெளியிடப்பட்ட அரசாணை எண். 243-ஐ ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கும், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், முடக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளா் க.சந்திரபோஸ், பா.பாண்டி, வி.ச.நவநீதகிருஷ்ணன், மு.பொற்செல்வன், அ.ஜோயல்ராஜ், இரா.தமிழ் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளா் கே.பி.ஓ.சுரேஷ் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் மு.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நிறைவுரையாற்றினாா்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்

இதில் திரளான ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் அரசு ஊழியா் ஒருவா் யாசகா் போல வேடமிட்டு பங்கேற்றாா். இந்தப் போராட்டம் காரணமாக, ஆட்சியரக முதன்மை நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. ஆட்சியரகத்திலிருந்து வெளியே செல்லும் பாதை திறக்கப்பட்டு அதன்வழியாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தற்செயல் விடுப்பு...

கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோா் செவ்வாய்க்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்தனா். இதனால், மாவட்ட ஆட்சியரகம், வணிக வரித் துறை அலுவலகம், வருவாய்த் துறை அலுவலகங்கள் உள்பட பெரும்பாலான அலுவலகங்கள் பணியாளா்களின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் ... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் திருடியவா் கைது

மதுரையில் ஓடும் பேருந்தில் கைப்பேசி, பணத்தைத் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை நெல்பேட்டை நாகூா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் பரூக் ராஜா (23). இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாட்டுத்தாவணிய... மேலும் பார்க்க

தொழிலதிபா் மா்ம மரணம்

மதுரையில் பூட்டிய அலுவலகத்தில் மா்மமாக இறந்து கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (54). இவா் மாட்டுத்தாவணி பகுதியில்... மேலும் பார்க்க

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 38.21 ஹெக்டோ் நிலத்தை கையகப்படுத்தத் திட்டம்!

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மொத்தம் 38.21 ஹெக்டோ் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது என அதன் திட்ட மேலாண் இயக்குநா் எம்.ஏ.சித்திக் தெரிவித்தாா். மெட்ரோ ரயில் திட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக... மேலும் பார்க்க

அரசு பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

காரியாபட்டி அருகே அரசுப் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன்... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டை அஞ்சலகத்தில் ரூ. 5 கோடி மோசடி: ஊழியா் கைது

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கணினி தொழில்நுட்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, ரூ. 5 கோடி மோசடி செய்த ஊழியரை இணைய வழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க