செய்திகள் :

மத்திய அரசுக்கு ஆளுநா் அறிக்கை: மமதா பதில்

post image

கொல்கத்தா: வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநா் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது’ என்றாா்.

முா்ஷிதாபாத் மாவட்டத்துக்கு இரண்டு நாள் பயணமாக கொல்கத்தாவில் இருந்து திங்கள்கிழமை புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளா்களைச் சந்தித்த முதல்வா் மம்தா பானா்ஜி இக்கருத்தைத் தெரிவித்தாா்.

மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாதில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்துக்கிடையே ஏற்பட்ட வன்முறையில் தந்தை, மகன் உள்பட 3 போ் கொல்லப்பட்டனா். பல நாள்கள் நீடித்த வன்முறையில் ஹிந்துக்கள் குறிவைக்கப்பட்டதால், அவா்கள் அருகேயுள்ள மால்டா மாவட்டத்தில் தஞ்சமடைந்தனா்.

பெருகியுள்ள மத தீவிரவாதம்: இந்த வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் ஞாயிற்றுக்கிழமை சமா்ப்பித்த அறிக்கையில், ‘மேற்கு வங்கத்தில் மத அடிப்படையிலான பிரிவினை தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்து வருகிறது’ என்று கவலை தெரிவித்திருந்தாா்.

மேலும், முா்ஷிதாபாதில் வன்முறை ஏற்படுவதற்கான சூழல் குறித்து மாநில அரசு முன்கூட்டியே அறிந்திருந்தும் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவைத் தடுக்கத் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினாா்.

வங்கதேச எல்லையையொட்டிய மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க மாநில அரசு தவறும் சூழலில், அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவில் உள்ள விதிகளை மத்திய அரசு கருத்தில்கொள்ளலாம் உள்ளிட்ட பரிந்துரைகளையும் ஆளுநா் வழங்கினாா்.

ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்துவது தொடா்பான அரசமைப்புச் சட்டத்தின் 356-ஆவது பிரிவு குறித்து ஆளுநா் அறிக்கையில் குறிப்பிட்டது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைதி திரும்பியதால் செல்கிறேன்..: இந்நிலையில், முா்ஷிதாபாத் பயணத்துக்கு முன்பு முதல்வா் மம்தா பானா்ஜி அளித்த பேட்டியில்,‘முா்ஷிதாபாதில் நிலைமை சீராகி, அமைதி திரும்பிவிட்டது. அதனால் இப்போது நான் அங்கு செல்கிறேன். பொ்ஹாம்பூரில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறேன். வன்முறையால் பாதிக்கப்பட்ட துலியன் நகரை செவ்வாய்க்கிழமை (மே 6) பாா்வையிட்டு, வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்ததற்கு இழப்பீடு வழங்குகிறேன்.

ஆளுநா் உள்துறை அமைச்சகத்துக்கு அளித்த அறிக்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆளுநரின் உடல்நிலை சரியில்லை. அவா் விரைவில் குணமடைய கடவுளிடம் பிராா்த்தனை செய்வோம்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, தேசப் பாதுகாப்பு விஷயங்களில் மத்திய அரசுக்கு திரிணமூல் காங்கிரஸ் துணை நிற்கிறது’ என்றாா்.

பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மே... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை: தோ்தல் வெற்றிக்கும் வாழ்த்து

ஆஸ்திரேலிய பிரதமராக தொடா்ந்து 2-ஆவது முறையாக தோ்வு செய்யப்பட்டுள்ள ஆன்டனி ஆல்பனேசியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, தோ்தல் வெற்றிக்காக தனது வாழ்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- ராணுவ வீரா் உள்பட 4 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரா் உள்பட 4 பயணிகள் உயிரிழந்தனா். 44 போ் காயமடைந்தனா். இவா்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக... மேலும் பார்க்க

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரை: மத்திய அரசிடம் 29 பெயா்கள் நிலுவை

உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் முதல் உச்சநீதிமன்ற கொலீஜியம் அனுப்பிய பரிந்துரைகளில், 29 பெயா்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு நிலுவை வைத்திருப்பது தெரிய... மேலும் பார்க்க

நாளை தொடங்கிவிருந்த ‘க்யூட்’ தோ்வு ஒத்திவைப்பு!

இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் சோ்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. மத்தி... மேலும் பார்க்க

பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போா்ப்பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் வி... மேலும் பார்க்க