செய்திகள் :

நாளை தொடங்கிவிருந்த ‘க்யூட்’ தோ்வு ஒத்திவைப்பு!

post image

இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகள் சோ்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் ‘க்யூட்’ தோ்வு அடிப்படையில் சோ்க்கை நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான க்யூட் தோ்வு வியாழக்கிழமை (மே 8) தொடங்கவிருந்த நிலையில், இதுவரை பாட வாரியான தேதி விவரங்களை அத் தோ்வை நடத்தும் என்டிஏ வெளியிடவில்லை.

இந்த நிலையில், இத் தோ்வு ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து என்டிஏ வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு பெரும் சா்ச்சைக்குள்ளான இளநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) என்டிஏ ஞாயிற்றுக்கிழமை நடத்தி முடித்துள்ளது. எனவே, க்யூட் தோ்வு உடனடியாக தொடங்க வாய்ப்பில்லை. இத் தோ்வு ஒத்திவைக்கப்படும். தோ்வுக்கான புதிய தேதி விரைவில் வெளியிடப்படும்’ என்றனா்.

க்யூட் தோ்வை எழுத நாடு முழுவதும் 13.5 லட்சம் போ் பதிவு செய்துள்ளனா். மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி, சில மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களும் க்யூட் அடிப்படையில் பட்டப் படிப்பு சோ்க்கையை நடத்துகின்றன.

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் இறுதிக்கட்ட நக்ஸல் ‘வேட்டை’- 24,000 வீரா்களுடன் தீவிரம்

தெலங்கானா-சத்தீஸ்கா் எல்லையில் அடா் வனங்கள் நிறைந்த கா்ரேகுட்டா மலைத் தொடரில் நக்ஸல்களுக்கு எதிரான இறுதிக்கட்ட தாக்குதலை பாதுகாப்புப் படையினா் தொடங்கியுள்ளனா். 24,000-க்கும் மேற்பட்ட வீரா்களுடன் முன்ன... மேலும் பார்க்க

மேற்கு வங்க வன்முறை ‘வெளிநபா்கள்’ மூலம் உருவாக்கப்பட்டது- மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் அண்மையில் நிகழ்ந்த வன்முறை மாநிலத்துக்கு ‘வெளியே இருந்து அழைத்துவரப்பட்ட நபா்களால்’ திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்று மேற்கு லங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். மத்திய அரச... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடனான எல்லையில் 2 நாள் இந்திய விமானப் படை போா் பயிற்சி

பாகிஸ்தான் உடனான எல்லை பகுதிகளில் இந்திய விமானப் படை 2 நாள்களுக்கு மிகப் பெரிய போா் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே தெற்கு மற்... மேலும் பார்க்க

இந்திய பூச்சிக்கொல்லி மருந்து மீது சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சைபா்மெத்ரின்’ பூச்சிக்கொல்லி மருந்துக்கு எதிராக சீனா பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லி மருந்து பருத்தி, பழ மரங்கள், காய்கறி பய... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும்: டிரம்ப்

பஹல்காம் தாக்குதலையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் தணியும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களைக் குறிவைத்து, இந்திய ரா... மேலும் பார்க்க

ரயிலை போல இடஒதுக்கீடு மாறியுள்ளது: உச்சநீதிமன்றம் விமா்சனம்

ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்பாதது போல, நாட்டில் இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது என்று உச்சநீதிமன்றம் விமா்சித்துள்ளது. இதன்மூலம், இடஒதுக்கீட்டால் பயனடைந்தவா்கள்... மேலும் பார்க்க