செய்திகள் :

தருமபுரியில் ஓய்வு பெற்ற அரசு அலுவலா் வீட்டில் 52 பவுன் நகை கொள்ளை

post image

தருமபுரியில் ஓய்வு பெற்ற தொழிலாளா் நலத் துறை அலுவலரின் வீட்டின் கதவை உடைத்து 52 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் முதல் தளத்தில் வசிப்பவா் தொழிலாளா் நல துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலா் ராமநாதன் (66). இவா், தனது மனைவி இந்திராணி, மருமகள் ஜெயலட்சுமி மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.

கடந்த ஒன்றாம் தேதி பெங்களூரில் பணியாற்றி வரும் அவரது மகன் தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு வந்தாா். அதன்பிறகு அவருடன் குடும்பத்தினா் அனைவரும் பெங்களூரு சென்றனா். பின்னா் செவ்வாய்க்கிழமை தருமபுரியில் உள்ள வீட்டிற்கு அவா்கள் வந்தபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த ஐம்பத்து இரண்டரை பவுன் நகை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், காவல் துணை கண்காணிப்பாளா் சிவராமன் ஆகியோா் கொள்ளை நிகழ்ந்த இடத்தை ஆய்வு செய்தனா். கொள்ளையா்களைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிலாளா்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளது: பொன்.குமாா்

திமுக ஆட்சியில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணப் பலன்களும் உயா்த்தப்பட்டுள்ளதால் அவா்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளதாக கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத் த... மேலும் பார்க்க

சாலை போக்குவரத்து மசோதாவை ரத்து செய்ய வலியுறுத்தல்

சாலை போக்குவரத்து மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி ஆட்டோ மற்றும் போக்குவரத்து சம்மேளனம் வலியுறுத்தியுல்ளது. ஒகேனக்கல்லில் சம்மேளனத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

‘நிதி நிலைமைக்கு ஏற்றவாறு கோரிக்கைகள் நிறைவேற்றம்’

பென்னாகரம்: மாநிலத்தின் நிதி நிலைமைக்கு ஏற்றவாறு எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தாா். பென்னாகரம் அரு... மேலும் பார்க்க

அரூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா

அரூா்: அரூரை அடுத்த செல்லம்பட்டி ஊராட்சியில் ரூ. 6.45 கோடி மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரூா் வட்டம், செல்லம்பட்டி ஊராட்சிக்கு... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி கரையோர வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்... மேலும் பார்க்க

தருமபுரியில் பேருந்து வழித்தட நீட்டிப்பு, மாற்ற சேவை

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மகளிா் விடியல் பயணம் பேருந்து சேவையை 8 வழித்தடத்தில் நீட்டிப்பு மற்றும் மாற்ற சேவையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் திங்கள்கி... மேலும் பார்க்க