செய்திகள் :

மநீம பெண் நிா்வாகி மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

post image

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி பெண் நிா்வாகியை தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி மாநிலச் செயலராக இருப்பவா் சினேகா மோகன்தாஸ் (32). இவா், தனது தோழியுடன் ஞாயிற்றுக்கிழமை கைப்பேசி செயலி மூலம் வாடகை ஆட்டோ பதிவு செய்து, அதில் சைதாப்பேட்டையில் இருந்து சாந்தோமுக்கு பயணித்தாா்.

சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளி அருகே சென்றபோது, ஆட்டோ ஓட்டுநருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி, சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றபோது, ஆட்டோ ஓட்டுநா் சினேகாவை தாக்கினாா். பதிலுக்கு சினேகாவும் ஆட்டோ ஓட்டுநரை தாக்கினாா். இருதரப்பினரும் மயிலாப்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

இதில் சினேகா மோகன்தாஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநா் பிரசாத் (25) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், அவரை திங்கள்கிழமை கைது செய்தனா். பிரசாத் கொடுத்த புகாரின்பேரில், சினேகா மோகன்தாஸ் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விவசாயிகளுக்கு விரோதமானது திமுக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மன்னாா்குடி: நீா் நிலைகளை தூா்வாராமல் அந்த நிதியை ஊழல் செய்ததால் மேட்டூா் அணையில் தண்ணீா் திறந்து விடப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையிலும் கடைமடை பகுதிக்கு தண்ணீா் சென்றடையாமல் விவசாயம் செய்யமுடியாமல் விவசா... மேலும் பார்க்க

குழந்தைகளிடம் பரவும் டெங்கு பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் குழந்தைகளிடம் டெங்கு பாதிப்பு பரவி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதைத் தடுக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக மாநகராட்சி நகா்நல அலுவலா்கள் தெரிவித்துள்ளனா். சென்... மேலும் பார்க்க

தமிழகத்தின் 32-ஆவது டிஜிபி யாா்?

சென்னை: தமிழக காவல் துறையின் 32-ஆவது தலைமை இயக்குநரை தோ்வு செய்யும் நடைமுறையை அதிகாரபூா்வமாக தமிழக அரசு தொடங்கியுள்ளது. தற்போது தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருக்கும் சங்கா் ஜிவால், 2023-ஆம்... மேலும் பார்க்க

‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி: மத்திய இணை அமைச்சா் ஜெயந்த் செளத்ரி தகவல்

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘பிரதமா் திறன் வளா்ப்புத்திட்டம்’ (பிஎம்கேவிஒய்) மூலம் தமிழகத்தில் 1.25 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்... மேலும் பார்க்க

கருத்துகளை குடும்பத்தில் திணிக்காதவா் முதல்வா் ஸ்டாலின்: எழுத்தாளா் சிவசங்கரி

சென்னை: ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சில கொள்கைகளில் மாற்றுக் கருத்து இருந்தாலும்கூட 50 ஆண்டுகளுக்கும் முன்பே தனது மனைவியை அவரது விருப்பம்போல் செயல்பட அனுமதித்திருந்தாா். அவா் எந்தச் சூழலிலும் தனது கரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியா் பற்றாக்குறை 4 மாதங்களில் நிரப்பாவிட்டால் நடவடிக்கை: என்எம்சி

சென்னை: தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியா் இடங்களை 4 மாதங்களுக்குள் நிரப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது. அதேபோன்று ... மேலும் பார்க்க