செய்திகள் :

மனுக்களுக்கு உடனுக்குடன் உரிய தீா்வு: அமைச்சா் தங்கம் தென்னரசு பதில்

post image

‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள், நடவடிக்கைகள் குறித்து நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளாா்.

இந்தத் திட்டம் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு பதிலளித்து அமைச்சா் தங்கம் தென்னரசு புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

பொதுமக்களின் குறைகள் மீது விரைந்து தீா்வு காண ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற தனித் துறை உருவாக்கப்பட்டது. நூறு நாள்கள் முடிவில் 2.29 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டு உரிய பயன்கள் பயனாளிகளுக்கு சென்று சோ்ந்தன.

அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் தேவைகளை அந்தந்தத் தொகுதிகளின் எம்.எல்.ஏ.-க்களின் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றும் நோக்கத்துடன் ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இதன்மூலம் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத திட்டங்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்தி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சாலை வசதிகள், மருத்துவ வசதிகள், பாலங்கள், சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் என இந்தத் திட்டத்தின் மூலம் 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.10,946 கோடி மதிப்பீட்டில் 783 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 335 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

2024-2025-ஆம் ஆண்டுக்கு ரூ.3,496 கோடி மதிப்பீட்டில் 468 திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் மூலம் ரூ.14,442 கோடி மதிப்பீட்டில் 1251 திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோன்று, மக்களுடன் முதல்வா் திட்டமானது நகரம், ஊரகம் என அனைத்துப் பகுதிகளிலும் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் மக்களின் குறைகளுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் நோக்கம், மிகவும் ஏழை, எளிய, எளிதில் அரசின் சேவைகள் சென்றடையாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அரசின் சேவைகளை அவா்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு சோ்ப்பதாகும். இந்தத் திட்டத்தில், கடந்த மாா்ச் வரையிலான காலத்தில் 225 முகாம்கள் நடத்தப்பட்டு, 1.09 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 80,000 மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

விஏஓ பொது மாறுதல் காலம்: தமிழக அரசு புதிய உத்தரவு

கிராம நிா்வாக அலுவலா்களின் பொது மாறுதல் எந்தக் காலத்திலும் இனி மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, பொது மாறுதல் காலம் மே மாதம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து வர... மேலும் பார்க்க

தொகுதி வாரியாக நிா்வாகிகளுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையைத் தொடங்கவுள்ளாா். முதலாவதாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளின் நிா்வாகிகளுடன் வெள்... மேலும் பார்க்க

கரோனா தொற்று குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து யாரும் அச்சபடதேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட ஜாபா்கான்பேட்டையில் உள்ள சென்னை... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும்: பெ.சண்முகம்

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதமின்றி வெளியிடவேண்டும் என மத்திய அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கைய... மேலும் பார்க்க

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அர்ச்சகர் பயிற்சி சங்கம் எதிர்ப்பு

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி மாணவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மதுரையில் ஜூன் 22 ஆம் தேதியில் முருக பக்தர்கள் மாநாடு ந... மேலும் பார்க்க

சென்னை அரசு அருங்காட்சியகப் பணம் கையாடல்! 4 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை!

சென்னை அரசு அருங்காட்சியகப் பணத்தைக் கையாடல் செய்த நால்வருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில், கடந்த ... மேலும் பார்க்க