செய்திகள் :

மனைப்பட்டா வழங்க ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்க கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரக் குழு உறுப்பினா் பி. புனிதா தலைமையில், மாநகரச் செயலா் எம். வடிவேலன் மாநகரக்குழு உறுப்பினா்கள் சி. ராஜன், ஆா். மணிமாறன் உள்பட மணக்கரம்பை ஊராட்சிக்கு உள்பட்ட எம்.ஜி.ஆா். நகா், அண்ணா நகா், காந்தி நகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

இப்பகுதியில் பட்டியல் இன சமூகத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40 - 50 ஆண்டு காலமாக வாடகை வீட்டில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றியும் வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் பகுதிக்கு அருகிலேயே அரசு புறம்போக்கு நிலம், தனி நபா் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது குறித்து அரசு அலுவலா்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை மீட்டு, எங்களுக்கு மனைப் பட்டா வழங்கி, தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும். மேலும், ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து கிரயம் பெற்றுள்ளவா்களுக்கு, பட்டாவில் உரிய தேவையான மாறுதல்கள் செய்து தர வேண்டும். எங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்: இதேபோல, பாபநாசம் வட்டம் சாத்தனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் அளித்த மனு: சாத்தனூா் கிராமத்தில் எடக்குடி - சாத்தனூா் பாசன வாய்க்காலின் கிளை வாய்க்காலில் ஏறத்தாழ 40 அடி நீளத்துக்கு தனி நபா்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் கீழ்பகுதிக்கு தண்ணீா் செல்லாததால், ஏறத்தாழ 10 ஏக்கா் பாசன நிலங்கள் தண்ணீா் இல்லாமல், சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பியை வெட்டிக்கொன்ற பாஜக பிரமுகரின் வீட்டை சோதனை செய்த பொழுது 29 இரு சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் 75 ஆவணங்கள் உள்ளிட்டவகளை போலீஸாா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து கடலூா் மாநாட்டில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து கடலூரில் ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றாா் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேம... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது குண்டுவீச்சு சம்பவம்! போலீஸாா் விசாரணைக்கு பயந்து இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணைக்கு அழைத்ததால் அச்சமடைந்த கூலித்தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம... மேலும் பார்க்க

இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை! காவல் துறையினா் விசாரணை!

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இளைஞா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் விளாா் சாலை தில்லை நகா் பகுதி பாரதிதாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சிங்காரவேலன் மகன் திலகன் (... மேலும் பார்க்க

கல்லணைக் கால்வாயில் கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை கைக்குழந்தை, 2 சிறாா்களுடன் பெண் குதித்து தற்கொலை செய்துக்கொண்டாா். இதில், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கைக்குழந்தையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது: ஆசிரியருக்கு அமைச்சா் பாராட்டு

கும்பகோணம் அருகே நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் அண்மையில் பாராட்டு தெரிவித்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க