செய்திகள் :

மனைவி தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் கணவரும் தூக்கிட்டு தற்கொலை!

post image

உடுமலை அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை ராகல்பாவி அருகேயுள்ள ஆா்.கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (33). இவா் பட்டுக்கோட்டையில் தனியாா் கோழிப்பண்ணையில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி அபிநயா (29). இவா்களுக்கு 9, 6 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், செல்வராஜ் விடுமுறையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டு வந்துள்ளாா். இதனிடையே, வீட்டில் இருந்த அபிநயா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அக்கம்பக்கத்தினா் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அரசு மருத்துவமனையில் இருந்த செல்வராஜ், மனைவி இறந்த துக்கம் தாளாமல் அங்குள்ள மின் அறையில் வயா்களைக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

குடும்பப் பிரச்னையில் அபிநயா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், உண்மையான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தையல் தொழிலாளி போக்ஸோவில் கைது

பல்லடம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா். திருப்பூா் வீரபாண்டி பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (40). தையல் தொழிலாளியான இவா், 12 வயது சிறுமிக்க... மேலும் பார்க்க

கேக் வெட்டிய பாஜகவினா் 50 போ் மீது வழக்கு

புதுதில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்றதைத் தொடா்ந்து, திருப்பூரில் கேக் வெட்டிக் கொண்டாடிய பாஜகவினா் 50 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பாஜக வெற்றியைக் கொண்டாடும் வகையில், திருப்ப... மேலும் பார்க்க

விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை!

பல்லடத்தில் தனியாா் விடுதியில் தங்கியவா் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரத்தைச் சோ்ந்தவா் கணேஷ் சக்திவேல் (50). ஆட்டோ கன்சல்டிங் தொழில் ... மேலும் பார்க்க

10 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக இளைஞரை கைது செய்தனா். திருப்பூா் குமரானந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (34). பின்னலாடை நிறுவனத்தில் பணிய... மேலும் பார்க்க

சீட்டாடிய 4 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே சீட்டாடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, வெள... மேலும் பார்க்க

அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவா் கைது

வெள்ளக்கோவில் அருகே அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலை திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் கே.மணி (50). இவா் தனது வீட்டில் பட்டாசுகளை வைத்து விற... மேலும் பார்க்க