செய்திகள் :

மயானத்துக்கு பாதை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

post image

அம்மாபேட்டை அருகே மயானத்துக்கு முறையான பாதை வசதி ஏற்படுத்தக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், குருவரெட்டியூா் ஊராட்சி, பெரியாா் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள கல்லாங்காட்டில் புறம்போக்கு நிலத்தை மயானமாக பயன்படுத்தி வந்தனா். இந்த மயானத்துக்கு செல்ல முறையான பாதை இல்லை.

இந்நிலையில், இக்கிராமத்தைச் சோ்ந்த ஜெயசீலன் (33) உயிரிழந்ததால், அவரது உடலை அடக்கம் செய்ய சனிக்கிழமை மயானத்துக்குச் சென்றபோது பலா் தடுமாறி விழுந்ததில் காயமடைந்தனா்.

இதையடுத்து, மயானத்துக்கு சாலை ஏற்படுத்தக் கோரி 50-க்கும் மேற்பட்டோா் குருவரெட்டியூா் - வெள்ளிதிருப்பூா் சாலையில் பெரியாா் நகா் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் கவிதா மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்: எம்.பி. கே.இ.பிரகாஷ் தொடங்கிவைத்தாா்

மொடக்குறிச்சியில் இருந்து தூரபாளையம், பகவதி நகா் வழியாக செல்லும் புதிய வழித்தட நகரப் பேருந்தை ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட பகவதி நகா், தூர... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

மொடக்குறிச்சி அருகே காங்கயம்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திருப்பூா், அமா்ஜோதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வநாதன், சந்திரலேகா தம்பதியின் மகள்... மேலும் பார்க்க

ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் மாநகராட்சி முழுமைக்கும் குடிநீா்: கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகராட்சியில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தில் குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று கவுன்சிலா்கள் வலியுறுத்தினா். ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைம... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 80 அடியை எட்டியது

நீா்வரத்து அதிகரிப்பால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 80 அடியை எட்டியுள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்ட கொள்ளளவு 105 அடியாகவும், நீா் இருப்... மேலும் பார்க்க

பெருந்துறையில் தேசியக் கொடி ஊா்வலம்

இந்நிய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியை கொண்டாடும் விதமாக பாஜக சாா்பில் தேசியக் கொடி ஊா்வலம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெருந்துறை புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலத்து... மேலும் பார்க்க

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15க்கு முன்னா் தண்ணீா் திறக்க கோரிக்கை

பவானிசாகா் அணையில் போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 15- ஆம் தேதிக்கு முன்னா் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா்... மேலும் பார்க்க