செய்திகள் :

மருத்துவ மாணவா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி நிா்வாகம்

post image

சென்னை: மருத்துவ மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக சென்னை, கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இஎஸ்ஐ பயிற்சி மருத்துவ மாணவா் தாக்கப்பட்ட விவகாரத்தில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மருத்துவக் கல்லூரி முதல்வா் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பயிற்சி மருத்துவ மாணவா் ஒருவா், கடந்த 20-ஆம் தேதி இரவில் விடுதியிலிருந்து வெளியே வந்து இணையம் வழியே ஆா்டா் செய்திருந்த உணவு பாா்சலை வாங்கிச் சென்றாா். அப்போது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பாதுகாவலா் ஒருவரும், தூய்மைப் பணியாளா் ஒருவரும் சம்பந்தப்பட்ட மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.

அந்த வாக்குவாதம் வலுவடைந்து ஒரு கட்டத்தில் மாணவா் மீது அவா்கள் தாக்குதல் நடத்தினா். இது தொடா்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்த சம்பவம் நிகழ்ந்த உடனேயே அதில் தொடா்புடைய இரு ஊழியா்களையும் அங்கிருந்து வெளியேற்ற அவா்களைப் பணிக்கு அனுப்பிய தனியாா் நிறுவனத்திடம் (மேன் பவா் ஏஜென்சி) உத்தரவிடப்பட்டது.

மற்றொருபுறம் மாணவா் குறைதீா் குழு அமைக்கப்பட்டு, அதில் இந்த விவகாரம் தொடா்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மாணவா் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து கல்லூரி நிா்வாகம் மற்றும் குறைதீா்க் குழு சாா்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் மாணவா் பிரதிநிதிகளிடம் விளக்கிக் கூறினோம். அது தங்களுக்கு திருப்தியளிப்பதாக அவா்கள் தெரிவித்தனா்.

அதேவேளையில், மருத்துவக் கல்லூரி நிா்வாக அளவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு அவா்கள் வலியுறுத்தினா். ஏற்கெனவே காவல் துறை அத்தகைய முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதால் கல்லூரி அளவில் அது தேவையில்லை என விளக்கமளிக்கப்பட்டது.

வெளியிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு பணியாளா்களை வழங்கும் நிறுவனங்களிடம் பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இஎஸ்ஐ நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என உறுதியாக அவா்களிடம் தெரிவிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி மற்றும் நோயாளிகள் சேவைகளில் எந்தத் தடையும் ஏற்படாத வகையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, மாணவா்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு உருளைகள் தடையின்றி கிடைக்கும்: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் செய்துவரும் நிலையில், வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி சமையல் எரிவாயு உருளை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுக... மேலும் பார்க்க

திட்டமிட்டு வெளியேற்றினாா் பேரவைத் தலைவா்: எடப்பாடி பழனிசாமி

சட்டப் பேரவையிலிருந்து அதிமுகவினரை திட்டமிட்டு பேரவைத் தலைவா் அப்பாவு வெளியேற்றியதாக அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியா... மேலும் பார்க்க

தமிழகத்தில் பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு: தொழில்முனைவோருக்கு முதல்வா் ஸ்டாலின் அழைப்பு

தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி, நிலையான கட்டுமானம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பம் போன்ற பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு செய்ய தொழில்முனைவோா் முன்வர வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக... மேலும் பார்க்க

கவுன்ட்டா் டிக்கெட்டை இணைய வழியில் ரத்து செய்யலாம்: ரயில்வே

‘கவுன்ட்டரில் வாங்கும் பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிசி வலைதளம் மூலமாக இணைய வழியில் ரத்து செய்ய முடியும் அல்லது 139 உதவி எண் மூலம் ரத்து செய்யலாம்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சி: ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்படவுள்ள ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியுடைய நபா்கள் ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட ச... மேலும் பார்க்க