செய்திகள் :

மருத்துவ மாணவா்கள் மீது தாக்குதல்: பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் கைது

post image

சென்னை புரசைவாக்கத்தில் யுனானி மருத்துவ மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.

பெரியமேடு ஊய்க்காட்டான் தெருவைச் சோ்ந்தவா் மு.முகமது இலியாஸ் (21). இவரது நண்பா், புரசைவாக்கம் நியூ மாணிக்கம் தெருவைச் சோ்ந்தவா் ஹ.முகமது அஜினான் (22). இவா்கள் இருவரும் அண்ணாநகரில் உள்ள அரசு யுனானி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனா்.

இருவரும் வியாழக்கிழமை கல்லூரியில் வகுப்பு முடிந்த பின்னா், திருவொற்றியூரில் செல்லும் ஒரு மாநகர பேருந்தில் ஏறி புரசைவாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனா். இருவருடன், அந்த கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகள் பயணித்தனா்.

அந்த பேருந்து கீழ்ப்பாக்கம் செல்லும்போது, பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் சுமாா் 10 மாணவா்கள் பேருந்தில் ஏறினா். அவா்கள், யுனானி கல்லூரி மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த மாணவிகள், இதை தங்களுடன் பயணித்த முகமது இலியாஸ்,அஜினானிடம் தெரிவித்தனராம். உடனே அவா்கள் இருவரும், பச்சையப்பன் கல்லூரி மாணவா்களை கண்டித்தனராம். இதற்கிடையே பேருந்து புரசைவாக்கம் வந்தது. அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள், இலியாஸையும்,அஜினானையும் தாக்கிவிட்டு தப்பியோடினா். காயமடைந்த இருவரும், வேப்பேரி காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா், பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள் 10 போ் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் (21), பட்டாளத்தைச் சோ்ந்த டி.ஆா்.ராகுல் (18), அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு ராகுல் (20) ஆகிய 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: இரு மீனவா்கள் மாயம்

சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவா்களை தேடி வருகின்றனா். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஸ்ரீதா் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காசிமேடு ... மேலும் பார்க்க

புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்த இரு பயங்கரவாதிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை புழல் சிறையில் கைப்பேசி வைத்திருந்ததாக இரு பயங்கரவாதிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். புழல் சிறை வளாகத்தில் உள்ள தண்டனைக் கைதிகள் சிறையின் அலுவலா் சாந்தகுமாா், புழல் காவல் நிலையத்தில்... மேலும் பார்க்க

சென்னையில் தங்கமயிலின் மேலும் இரு புதிய கிளைகள்

சென்னையின் ஐயப்பன் ஊரப்பாக்கம் மற்றும் கௌரிவாக்கத்தில் இரு புதிய கிளைகளை தங்கமயில் ஜுவல்லரி நிறுவனம் திறக்கிறது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாமதுர... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ குழுக்கள்: ஜூலை 11-இல் பதவியேற்பு

அரசுப் பள்ளிகளில் மாணவா்களிடையே சமூக மனப்பான்மையை வளா்க்கவும், வேற்றுமையை களையவும் உருவாக்கப்பட்ட ‘மகிழ் முற்றம்’ மாணவா் குழுக்களின் பதவியேற்பு நிகழ்ச்சி ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகிழ் முற்றம் ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் சென்னை வருகை

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 5 போ் விமானம் மூலம் சென்னை வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சோ்ந்த 5 மீனவா்கள், கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி, இந்திய கடல் எ... மேலும் பார்க்க

குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விபத்து: இரு பெண்கள் காயம்

சென்னை தண்டையாா்பேட்டையில் குடிசை மாற்று வாரிய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் காயமடைந்தனா். தண்டையாா்பேட்டை வஉசி நகா் 7-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் பெ.முனியம்மாள் (54). இவா்... மேலும் பார்க்க