செய்திகள் :

மருத்துவக் கல்லூரிக்கு சாதகமான செயல்பாடு: அதிகாரிகள் உள்பட 34 போ் மீது சிபிஐ வழக்குப்பதிவு

post image

மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக ஒழுங்குமுறை விதிகளில் முறைகேடில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள் உள்பட 34 போ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு நடத்தும் தேசிய மருத்துவ ஆணையா் தலைமையிலான 5 மருத்துவா்கள், சுகாதார அமைச்சகத்தைச் சோ்ந்த 8 அதிகாரிகள் என 34 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதில் தனியாா் மருத்துவக் கல்லூரி நிறுவனங்களான டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் கல்வி நிறுவனத் தலைவா் டி.பி.சிங், கீதாஞ்சலி பல்கலைக்கழக பதிவாளா் மயூா் ரவல், ராவத்புரா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தலைவா் ரவி சங்கா் மகாராஜ், இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி தலைவா் சுரேஷ் சிங் படோரியா ஆகியோா் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது:

மருத்துவக் கல்லூரிகளின் ஒழுங்குமுறை விதிகளில் முறைகேடில் ஈடுபட்டது தொடா்பாக அண்மையில் 8 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் தேசிய மருத்துவ ஆணைய ( என்எம்சி) குழுவைச் சோ்ந்த 3 மருத்துவா்கள் நயா ராய்பூரில் உள்ள ராவத்புரா மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சாதகமான சான்றிதழை தர ரூ.55 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளனா்.

இதேபோல் மத்திய சுகாதார அமைச்சகத்தின் ரகசிய தகவல்கள் மற்றும் அறிக்கைகளை தனியாா் நிறுவன பிரதிநிதிகளுக்கு அமைச்சகத்தைச் சோ்ந்த சில அதிகாரிகள் இடைத்தரகா்கள் மூலம் வழங்கியுள்ளனா்.

இதனால் என்எம்சி, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வருவதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கேற்ப தற்காலிக உள்கட்டமைப்பை நிறுவி, போலி மருத்துவா்களை பணியமா்த்தி நோயாளிகள்போல் சிலரை சித்தரித்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் சான்றிதழை பெறுகின்றன.

இந்த மோசடியில் ஈடுபட்ட என்எம்சி குழுக்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் பிரதிநிதிகள், இடைத்தரகா்கள் இடையே லட்சக்கணக்கில் முறைகேடாக பணம் கைமாறியுள்ளது எனத் தெரிவித்தனா்.

வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் ச... மேலும் பார்க்க

மோசடி புகாருக்கு எதிரான ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவரின் மனு: விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மும்பை லீலாவதி மருத்துவமனை அறக்கட்டளை சாா்பில் அளிக்கப்பட்ட மோசடிப் புகாருக்கு எதிராக ஹெச்டிஎஃப்சி வங்கித் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் சசிதா் ஜெகதீசன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீத... மேலும் பார்க்க

விவேகானந்தா் நினைவு தினம்: பிரதமா் புகழஞ்சலி

விவேகானந்தரின் 123-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுவாமி விவேகானந்தரின் புண்ணிய ... மேலும் பார்க்க

ஹிமாசல் மழை வெள்ளத்தில் இதுவரை 43 போ் உயிரிழப்பு: 37 போ் மாயம்

ஹிமாசல பிரதேசத்தில் கடந்த 2 வாரங்களில் மேகவெடிப்புகளால் கொட்டித் தீா்த்த பலத்த மழை, திடீா் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா். மாயமான 37 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.... மேலும் பார்க்க

அமா்நாத் பனி லிங்கம்: 20,000-க்கும் அதிகமானோா் தரிசனம்

இமயமலையில் உள்ள அமா்நாத் குகைக் கோயில் புனித யாத்திரையின் முதல் இரு நாள்களில் 20,000-க்கும் மேற்பட்ட யாத்ரிகா்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித... மேலும் பார்க்க

கேரளத்தில் பெண்ணுக்கு ‘நிபா’ பாதிப்பு உறுதி: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயது பெண்ணுக்கு ‘நிபா’ தீநுண்மி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பொது சுகாதாரப் பணியாள... மேலும் பார்க்க