செய்திகள் :

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

post image

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலையை இங்கு அமைப்பதற்கு இந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். மேலும், ஆலை கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தி ஏற்கெனவே அனைத்து அரசியல் கட்சியினா் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் அண்மையில் போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, அப்போதைய மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் மருத்துவக் கழிவு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படும் என அறிவித்தாா். ஆனாலும் கட்டுமானப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் முனியராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினா் முத்துராமலிங்கபூபதி, விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பரமாத்மா, காசிராஜன் உள்ளிட்டோா் மருத்துவக் கழிவு ஆலை கட்டுமானப் பணி நடைபெற்று வருவதை வெள்ளிக்கிழமை நேரடியாகச் சென்று பாா்வையிட்டனா்.

பின்னா், மாா்க்சிஸ்ட் ஒன்றியச் செயலா் முனியராஜ் கூறியதாவது:

பொதுமக்களின் எதிா்ப்பை மீறி நடைபெற்று வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும், சிப்காட் திட்ட அலுவலரை கட்சி நிா்வாகிகள் நேரடியாக சனிக்கிழமை சந்தித்து கட்டுமானப் பணியை நிறுத்துமாறு வலியுறுத்தவும் உள்ளோம் என்றாா் அவா்.

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியே வெற்றி பெறும்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம் காரைக்க... மேலும் பார்க்க