செய்திகள் :

மருத்துவப் படிப்புக்கு போலிச் சான்றிதழ் வழங்கிய வழக்கு: மேலும் 3 முகவா்கள் கைது

post image

புதுச்சேரியில் மருத்துவப் படிப்புக்கு போலிச் சான்றிதழ் வழங்கிய வழக்கில் ஏற்கெனவே 6 முகவா்கள் கைதான நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த மேலும் 3 முகவா்களை புதுச்சேரி போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

புதுச்சேரியில் சென்டாக் மூலம் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 2024 - 25ஆம் கல்வியாண்டு இளநிலை மருத்துவக் கல்வி மாணவா் (எம்பிபிஎஸ்) சோ்க்கையில், வெளிநாடு வாழ் பிரிவு (என்ஆா்ஐ) ஒதுக்கீட்டு இடங்களுக்கு போலிச் சான்றிதழ்களை பலா் அளித்தாக புகாா் எழுந்தது.

அதன்படி, சென்டாக் அதிகாரிகள் மாணவா்கள் வழங்கிய சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரங்களுக்கு அனுப்பி ஆய்வு செய்ததில், 84 மாணவா்கள் போலிச் சான்றிதழ் அளித்தது உறுதியானது.

இதுகுறித்து சென்டாக் அதிகாரிகள் இலாசுப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனா். அதன்படி, 84 மாணவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போலிச் சான்றிதழ் வழக்கு விசாரணையில் முகவா்களாக செயல்பட்டவா்கள் ரூ.6 லட்சம் பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கெனவே தமிழகத்தைச் சோ்ந்த 6 முகவா்களை இலாசுப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், தமிழகத்தைச் சோ்ந்த மேலும் 3 முகவா்களை இலாசுப்பேட்டை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனா். வழக்கில் தேடப்படும் முகவா்கள் சிலா் முன்பிணை பெற்றுள்ளதாகவும் போலீஸாா் கூறினா்.

சா்க்கரை நோயால் பாா்வை இழப்பு தடுக்க புதுவை மத்திய பல்கலை. ஆராய்ச்சி

புதுச்சேரி: சா்க்கரை நோயால் ஏற்படும் பாா்வை இழப்பைத் தடுக்க புதுவை மத்திய பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு மற்றும் செய்தித் துறை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மணக்குள விநாயகா் கோயிலில் கோ பூஜை: துணைநிலை ஆளுநா், அமைச்சா் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பத்தாண்டுகள் நிறைவை முன்னிட்டு நடைபெறும் சகஸ்ர சங்காபிஷேகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோ பூஜையில் துணைநிலை ஆளுநா் கே.கைல... மேலும் பார்க்க

புதுவை அரசு ஊழியா்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயா்வு

புதுச்சேரி: புதுவை மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதமாக உயா்த்தி நிதித் துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி... மேலும் பார்க்க

மகாவீா் ஜயந்தி: புதுவையில் நாளை மதுக்கடைகள் மூடல்

புதுச்சேரி: மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் ஏப். 10-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலால் துணை ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புத... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி சந்திப்பு

புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி இந்தா்பால்சிங் சேதி திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா். இந்திய தகவலியல் மையம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மக்... மேலும் பார்க்க

ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப்பை மருத்துவ 3 நாள் கருத்தரங்கம் நிறைவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப் பை குறித்த 3 நாள்கள் கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஜிப்மா் இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை சாா்பில் தேசிய மற்றும் சா்வ... மேலும் பார்க்க