மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
மலைத் தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே மலைத் தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், சனி மூலைத் தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் சங்கா் (52), கூலித் தொழிலாளி. இவா் கடந்த மே 23-ஆம் தேதி வீட்டில் சமையல் செய்துள்ளாா். அப்போது கூட்டமாக வந்த மலைத் தேனீக்கள் கொட்டியதில் சங்கா் காயமடைந்தாா்.
இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்தவா், சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கண்டாச்சிபுரம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.