செய்திகள் :

மல்லிகை மட்டுமல்ல, ரசகுல்லா முதல் தேநீர் வரை! ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்டவை!

post image

ஒரு அரைமுழம் மல்லிகைப் பூவை என்னுடைய கைப்பையில் எடுத்துச் சென்றதற்காக, ஆஸ்திரேலியாவில், ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தியதாக நடிகை நவ்யா நாயர் தெரிவித்திருந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட பொருள்களின் பட்டியல் வெளியாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் ஓணம் பண்டிகைக் கொண்டாட, மலையாளிகள் அமைப்பு விடுத்த அழைப்பை ஏற்று, இந்தியாவிலிருந்து மெல்போர்ன் விமானம் நிலையம் சென்ற நவ்யா நாயர், அவருடைய கைப்பையில் மல்லிகைப் பூவை வைத்திருந்தக் குற்றத்துக்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அவரே தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட நிலையில், ஆஸ்திரேலியாவின், பயிர்ப் பாதுகாப்புக் கொள்கை, மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுவதாகவும், அவர்களது பயிர்ப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்று கருதும் எந்தவொரு பொருளையும் அந்நாட்டுக்குள் கொண்டு செல்வது குற்றம் என்றும் தெரிய வந்துள்ளது.

ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட பொருள்களை ஆஸ்திரேலியாவுக்குள் வெளிநாட்டினர் கொண்டு செல்லக் கூடாது.

அவற்றின் பட்டியலில் இடம்பெற்றுள்ள, ஆனால், மக்கள் தெரியாமல் கொண்டு செல்ல வாய்ப்புள்ள பொருள்களை மட்டும் தெரிந்துகொள்வது அவசியம்.

அந்த வகையில், காய்கறிகள், பழங்கள்,

மூலிகைகள், இலைகள், மிளகாய், பச்சை கொட்டைகள், விதைகள்

காய்ந்த அல்லது மலர்ந்த மலர்கள்

பால் பொருள்கள்

பர்ஃபி, ரச மலாய், ரசகுல்லா, பேடா, குலாப் ஜாமன், மைசூர் பாக்கு, சோன் பப்படி போன்ற இந்தியாவில் தயாரிக்கப்படும் இனிப்புகளையும் கொண்டு செல்லக் கூடாது.

பிரான்ஸ் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெக்கோா்னு நியமனம்

பிரான்ஸின் புதிய பிரதமராக பாதுகாப்புத் துறை அமைச்சா் செபாஸ்டியன் லெக்கோா்னுவை (39) அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரான் செவ்வாய்க்கிழமை நியமித்தாா். முன்னதாக, பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க

ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரா்கள் உயிரிழப்பு

உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் போா் முனைக்கு அருகே உள்ள யாரோவா நகரில் இந்தத் தாக்குதல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட... மேலும் பார்க்க

நேபாள பிரதமா் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு அமைச்சா்கள் வீடுகள் சூறை

நேபாளத்தில் இளைஞா்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து பிரதமா் பதவியை கே.பி.சா்மா ஓலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். இளைஞா்களின் வன்முறைப் போராட்டத்தில் நாடாளுமன்றம், உச்சநீதிமன்றத்துக்கு தீ ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது- டிரம்ப் ஆலோசகா் நவாரோ கருத்து

தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் இருந்தால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் வாழவே முடியாது என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் ... மேலும் பார்க்க

முன்னாள் அதிபா்களுக்கான சலுகைகள் பறிப்பு

இலங்கையின் முன்னாள் அதிபா்கள் மற்றும் அவா்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை பாராளுமன்றத்தில் சிறிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய... மேலும் பார்க்க

நாா்வே தோ்தலில் தொழிலாளா் கட்சி வெற்றி

நாா்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஜோனாஸ் காா் ஸ்டோரின் தொழிலாளா் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதையடுத்து, 28 சதவீத வாக்குகளைப் பெற்... மேலும் பார்க்க