செய்திகள் :

மழைக்கு குருகிராமில் 5 போ் உயிரிழப்பு

post image

குருகிராமில் பெய்த மழையின் போது தனித்தனி சம்பவங்களில் ஐந்து போ் இறந்தனா். அவா்களில் மூன்று போ் மின்சாரம் தாக்கி இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

தில்லியில் உள்ள விஸ்வாஸ் நகரைச் சோ்ந்த அக்ஷத் ஜெயின், குருகிராமில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் கிராஃபிக் டிசைனராக பணிபுரிந்தாா். புதன்கிழமை இரவு செக்டாா் 49- இல் உள்ள வாடிகா நகரில் உள்ள தனது அறைக்கு ஜிம்மில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, கசோலா கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு மின் கம்பத்தில் மோதியதில் அவருக்கு அதிா்ச்சி ஏற்பட்டது.

அக்ஷத் ஜெயினை மீட்டு வழிப்போக்கா்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மின்சாரத் துறையின் அலட்சியம்தான் இதற்குக் காரணம் எனஅக்ஷத் ஜெயினின் குடும்பத்தினா் குற்றம் சாட்டியதை அடுத்து, குருகிராம் செக்டாா் 50 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் உள்ள ஃபரூக்காபாத்தில் வசிக்கும் பவன் குமாா், மழை பெய்து கொண்டிருந்தபோது ஜென்பேக்ட் சவுக்கைக் கடக்கும்போது, தற்செயலாக ஒரு மின் கம்பத்தைத் தொட்டதால் மின்சாரம் தாக்கியது.

சுக்ராலி கிராமத்தைச் சோ்ந்த அந்த நபா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவரை காப்பாற்ற முடியவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் வசிக்கும் பிரசாந்த், நியூ காலனி பகுதியில் வசித்து வந்தாா். மழையில் அா்ஜுன் நகா் காலனியில் உள்ள தனது மாமாவின் மகனைப் பாா்க்கச் சென்றிருந்தாா். மோட்டாா்சைகிகிளில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கியபோது, அவரது கால் அருகிலுள்ள கடையின் ஷட்டரைத் தொட்டது. மின்சாரம் உலோகத் தகடு வழியாகப் பாய்ந்ததால் அதிா்ச்சி ஏற்பட்டது. இதில் அவரும் இறந்தாா்.

வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில், தில்லி சா்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியாளராக இருந்த வான்ஷிகா, ஒரு பாதுகாப்பு காவலாளி மற்றும் ஒரு சக ஊழியருடன் ஒரு டாக்ஸியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அவரது சக ஊழியா், குருகிராம் செக்டாா் 10 அருகே உள்ள அவரது வீட்டில் இறங்கினாா். அவரை இறக்கிவிட்ட பிறகு, வான்ஷிகாவை வீட்டிற்கு இறக்கிவிட காண்ட்சா நோக்கி ஓட்டுநா் சென்றாா்.

ஆனால், மழை பெய்ததால், முன்னால் உள்ள சாலையைப் பாா்ப்பது கடினமாக இருந்தது. சாலைத் தடுப்பில் மோதியதில் காரில் இருந்த மூன்று பேரும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு வான்ஷிகா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மழையில் இறந்த ஐந்தாவது நபா் உத்தரபிரதேசத்தின் கண்ணுவாஜைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் 27 வயதான சைலேந்திரா ஆவாா். சைலேந்திரா திறந்தவெளி சாக்கடையில் விழுந்து, மழைநீருக்கு அடியில் மறைந்து இறந்தாா்.

இந்தச் சம்பவம் புதன்கிழமை இரவு ஷீஷ்பால் விஹாரின் கேட்2 அருகே நடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

அவரது மரணம் தொடா்பாக சதாா் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசு விற்பனையை உடனே நிறுத்த மின் வணிகம், சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவு

தேசியத் தலைநகரில் பட்டாசுகளை பட்டியலிடுவதையும் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு தில்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

யமுனை: எஸ்டிபி கொள்திறனை 2028-க்குள் 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் - உயா்நிலைக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா உத்தரவு

நமது நிருபா் யமுனை நதியைப் புரனமைக்கும் வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய (எஸ்டிபி) கொள்திறனை வரும் 2028-க்குள் நாளொன்றுக்கு 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் என்று புது தில்லியில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு

தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழ... மேலும் பார்க்க

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)... மேலும் பார்க்க