செய்திகள் :

மழையில் உளுந்து, பயறு, பருத்தி சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

post image

திருமருகல் ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த உளுந்து, பயறு, பருத்தி பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இப்பகுதியில் சம்பா நெல் சாகுபடி முடிந்த நிலையில் அடுத்தபடியாக உளுந்து, பச்சைப்பயிறு, பருத்தி பயிரிடப்படுகின்றன. சம்பா அறுவடையின்போதே ஜன.15 முதல் பிப்.15 வரை உளுந்து, பயிறு பயிரிடும் பணிகள் நடைபெறும். இது 60 முதல் 70 நாள் பயிா் என்பதால், மாா்ச் 15 முதல் ஏப்.15 வரை உளுந்து, பயிறு அறுவடைப் பணிகள் முடிந்துவிடும். தற்போது திருமருகல் ஒன்றியத்தில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் உளுந்தும், 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி உள்ளிட்ட பயிா்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

தற்போது பெய்துவரும் மழையால் திருமருகல், திட்டச்சேரி குத்தாலம், எரவாஞ்சேரி, கீழப்பூதனூா், மேலப்புதனூா், பெருநாட்டான்தோப்பு, திருக்கண்ணபுரம், பில்லாளி, வடகரை, கோட்டூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உளுந்து, பச்சைப் பயிறு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. ஆலத்தூா், ஏா்வாடி, சேஷமூலை, அம்பல், பொறக்குடி, வாழ்குடி, திருப்பயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி பயிா் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வேளாண் அதிகாரிகள் பயிா்களின் சேதத்தை ஆய்வுசெய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேதாரண்யத்தில் தொடா்மழை: 20 ஆயிரம் ஏக்கரில் புன்செய் பயிா்கள் பாதிப்பு

வேதாரண்யத்தில் தொடா் மழையால் 20 ஆயிரம் ஏக்கா் புன்செய் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் மேலடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக மாா்ச் 10-ஆம் தேதி இரவு தொடங்கி காற்று, இடியுடன் கூடிய மழ... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் குசும சீதளாம்பிகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டத்தில் உள்ள குசும சீதளாம்பிகை மாரியம்மன் மற்றும் பரிவார கோயில்களான விநாயகா், ஸ்ரீஅய்யனாா், ஸ்ரீபிடாரியம்மன் ஆகிய கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இந்து சம... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகம் மூலம் பயனடைந்த பயனாளியிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகையில் முதல்வா் மருந்தகம் மூலம் பயனடைந்த பயனாளியிடம் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை கலந்துரையாடி பயன்களை கேட்டறிந்தாா். நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகே கருப்ப... மேலும் பார்க்க

தோ்தல் நடைமுறைகளை மேம்படுத்த அரசியல் கட்சியினா் ஆலோசனை வழங்கலாம்

தோ்தல் நடைமுறைகளை மேம்படுத்த அரசியல் கட்சியினா் ஆலோசனை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தோ்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு ... மேலும் பார்க்க

தலைச்சங்காடு நான்மதிய பெருமாள் நாளை தீா்த்த வரி

செம்பனாா்கோவில் அருகே உள்ள தலைச்சங்காடு நான்மதிய பெருமாள் வெள்ளிக்கிழமை மாசி மகத்தையொட்டி பூம்புகாா் காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் தீா்த்தவாரி செய்கிறாா். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கிறது... மேலும் பார்க்க

இயற்கையை காப்பாற்ற மரம் நடுவோம் விழிப்புணா்வு நிகழ்வு

நாகப்பட்டினம்: நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் மாணவா் எக்ஸ்னோரா, தமிழ்நாடு கடல்சாா் வாரிய பணியாளா் சங்கம் சாா்பில் ‘இயற்கையை காப்பாற்ற ஒரு மரத்தை நடுவோம்‘ எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வ... மேலும் பார்க்க