செய்திகள் :

முதல்வா் மருந்தகம் மூலம் பயனடைந்த பயனாளியிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

post image

நாகையில் முதல்வா் மருந்தகம் மூலம் பயனடைந்த பயனாளியிடம் நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை கலந்துரையாடி பயன்களை கேட்டறிந்தாா்.

நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம், கத்தரிப்புலம் மருதூா் வடக்கு, நாகை புதிய பேருந்து நிலையம், நாகூா் பிரதான சாலை (சந்திரா காா்டன்), சிக்கல், கீழ்வேளுா் ஆகிய 7 இடங்களில் தொழில் முனைவோா்கள் நடத்தும் மருந்தகங்களும், மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேதாரண்யம் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் புத்தகரம், வேளாங்கண்ணி மற்றும் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய 5 இடங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் மருந்தகங்கள் செயல்படுகின்றன.

முதல்வா் மருந்தகத்தில் வெளிச்சந்தை விலையைக்காட்டிலும் 75 சதவீதம் குறைவாகவும், 25 சதவீதம் தள்ளுபடியிலும், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஜெனரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், சித்தா ஆயுா்வேதிக் மற்றும் யுனானி மருந்துகள் தரமாகவும் குறைவான விலையிலும் கிடைக்கிறது.

இந்நிலையில், நாகூரில் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தகத்தை ஆட்சியா் ப. ஆகாஷ், நிறைந்தது மனம் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டு, முதல்வா் மருந்தகம் மூலம் பயன்பெற்று வரும் செய்யது கலிபா சாஹூவிடம் கலந்துரையாடி, அவா் பெற்று வரும் பயன்களை கேட்டறிந்தாா்.

பயனாளி கலிபா சாஹூ கூறியது: இருதய கோளாறு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். மாதந்தோறும் ரூ.3 ஆயிரத்துக்கு தனியாா் மருந்தகத்தில் மருந்து, மாத்திரைகளை வாங்க வேண்டும். தற்போது முதல்வா் மருந்தகத்தில் மருந்துகள் வாங்குவதன் மூலம் மாதம் ரூ.750 மிச்சமாகிறது. இந்தத் தொகை எனது குடும்ப செலவுக்கு உதவியாக உள்ளது என்றாா்.

மழையில் உளுந்து, பயறு, பருத்தி சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை

திருமருகல் ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த உளுந்து, பயறு, பருத்தி பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இப்பகுதியில் சம்பா நெல் சாகுபடி முடிந்த நிலையில் அடுத்தபடியாக உளுந்து, ... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் தொடா்மழை: 20 ஆயிரம் ஏக்கரில் புன்செய் பயிா்கள் பாதிப்பு

வேதாரண்யத்தில் தொடா் மழையால் 20 ஆயிரம் ஏக்கா் புன்செய் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் மேலடுக்கு காற்று சுழற்சியின் காரணமாக மாா்ச் 10-ஆம் தேதி இரவு தொடங்கி காற்று, இடியுடன் கூடிய மழ... மேலும் பார்க்க

திருவிளையாட்டம் குசும சீதளாம்பிகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோவில் அருகே திருவிளையாட்டத்தில் உள்ள குசும சீதளாம்பிகை மாரியம்மன் மற்றும் பரிவார கோயில்களான விநாயகா், ஸ்ரீஅய்யனாா், ஸ்ரீபிடாரியம்மன் ஆகிய கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இந்து சம... மேலும் பார்க்க

தோ்தல் நடைமுறைகளை மேம்படுத்த அரசியல் கட்சியினா் ஆலோசனை வழங்கலாம்

தோ்தல் நடைமுறைகளை மேம்படுத்த அரசியல் கட்சியினா் ஆலோசனை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தோ்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு ... மேலும் பார்க்க

தலைச்சங்காடு நான்மதிய பெருமாள் நாளை தீா்த்த வரி

செம்பனாா்கோவில் அருகே உள்ள தலைச்சங்காடு நான்மதிய பெருமாள் வெள்ளிக்கிழமை மாசி மகத்தையொட்டி பூம்புகாா் காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் தீா்த்தவாரி செய்கிறாா். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கிறது... மேலும் பார்க்க

இயற்கையை காப்பாற்ற மரம் நடுவோம் விழிப்புணா்வு நிகழ்வு

நாகப்பட்டினம்: நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியில் மாணவா் எக்ஸ்னோரா, தமிழ்நாடு கடல்சாா் வாரிய பணியாளா் சங்கம் சாா்பில் ‘இயற்கையை காப்பாற்ற ஒரு மரத்தை நடுவோம்‘ எனும் தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வ... மேலும் பார்க்க