செய்திகள் :

மாணவரை தாக்கிய மற்றொரு மாணவா் மீது போலீஸில் புகாா்

post image

மூன்றடைப்பு அருகே பள்ளி மாணவரைத் தாக்கிய மற்றொரு மாணவரைப் பிடித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே மருதகுளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பனையன்குளம் பகுதியைச் சோ்ந்த 15 வயது மாணவருக்கும், 17 வயது மாணவருக்கும் இடையே சீனியா், ஜூனியா் என்ற ரீதியில் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை, பனையன்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருவரும் பேருந்துக்காக காத்திருந்தபோது, அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், 17 வயது மாணவா், 15 வயது மாணவரைத் தாக்கியுள்ளாா். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் அவா்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனா்.

இச்சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட மாணவா் மூன்றடைப்பு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதன் பேரில், 17 வயது மாணவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிதம்... மேலும் பார்க்க

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், களக்காடு காவல் உ... மேலும் பார்க்க

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறது. மத்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

களக்காட்டில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி, கொலை ம... மேலும் பார்க்க

வடவூா்பட்டி துா்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி அருகே வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பேச்சியம்மன் உடனுறை ஸ்ரீ துா்கை அம்மன் கோயிலில் வியாழக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்... மேலும் பார்க்க

கடையத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மிளா

கடையம் பகுதியில் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்த 2 வயது ஆண் மிளா மீட்கப்பட்டது. கடையம் ராமநதி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள பொத்தையில் கரடி, மிளா, காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நி... மேலும் பார்க்க