செய்திகள் :

மாணவர்கள் படிக்காததால் `50 தோப்புக்கரணம்' போட்ட தலைமை ஆசிரியர்... அதிர்ச்சி சம்பவம்

post image

``மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்றால் அவர்களை ஆசிரியர்களால் அடிக்க முடியாது. மாணவர்களை ஆசிரியர்களால் அடிக்க முடியாத நிலையில், சரியாக படிக்காத மாணவர்களை தோல்வி அடையச்செய்யவும் முடியவில்லை. எனவே மாணவர்களை எப்படி நன்றாக படிக்க வைப்பது?'' என்று பல ஆசிரியர்கள் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஆந்திராவில் சரியாக படிக்காத மாணவர்கள் மத்தியில் தலைமை ஆசிரியர் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் உள்ள விஜயநகரம் என்ற இடத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் சிந்தா ரமனா. இவர் மாணவர்கள் அனைவரையும் பள்ளிக்கு வெளியில் வரிசையாக நிற்க வைத்தார். தலைமை ஆசிரியருடன் ஒரு மாணவரும், ஒரு ஆசிரியரும் நின்றனர்.

மாணவர்கள் மத்தியில் பேசிய தலைமை ஆசிரியர் ரமனா, ''உங்களை எங்களால் அடிக்க முடியாது. உங்களுடன் சண்டையிட முடியாது. எங்களது கைகள் கட்டப்பட்டுள்ளது. நாங்கள் உங்களுக்கு கற்றுக்கொடுத்து உங்களை படிப்பில் மேம்படுத்த எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட போதும் உங்களது செயல்பாட்டில் எந்த வித மாற்றமும் இல்லை. வாசிப்பதிலோ அல்லது எழுதுவதிலோ எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. பிரச்னை உங்களிடம் இருக்கிறதா அல்லது எங்களிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. பிரச்னை எங்களிடம் இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் உங்கள் முன்பு மண்டியிடுகிறேன். நீங்கள் விரும்பினால் எனது காதுகளை பிடித்துக்கொண்டு சிட்-அப்களை செய்யத்தயாராக இருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.

அதோடு நிற்காமல் மாணவர்கள் முன்பு அப்படியே படுத்து வணங்கிவிட்டு எழுந்து காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஆசிரியர் தொடர்ந்து அது போன்று செய்ததால் மாணவர்கள் அழுது கொண்டே நிறுத்தும்படி கேட்டனர். தலைமை ஆசிரியர் ரமனா 50 முறை தோப்புக்கரணம் போட்டு முடித்தார். ஆசிரியரின் செயல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது.

இதை பார்த்த மாநில அமைச்சர் லோகேஷ் ஆசிரியரின் செயலை பாராட்டி இருக்கிறார். படிக்காத மாணவர்களை தண்டிக்காமல் தன்னைத்தானே தண்டித்துக் கொண்ட விதத்தை அமைச்சர் பாராட்டி இருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

மேசை மீது ஏறி உணவில் சிறுநீர் கழித்த நபர்; 4000 பேருக்கு இழப்பீடு வழங்கிய ஹோட்டல் - என்ன நடந்தது?

சீனாவின் மிகப்பெரிய உணவகங்களின் ஒன்றான ஹைடிலாவ் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ வைரலானதை எடுத்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக அந்த நிறுவனம் உ... மேலும் பார்க்க

Roatan Island: `மரணத்தை தடுக்க ஊசி' உலக பணக்காரர்களை ஈர்க்கும் மர்ம தீவின் பின்னணி என்ன?

மர்மத்தீவு ஒன்றில் மரணத்தை தடுக்கும் ஊசி போடப்படுவதாகவும் அதனை உலகின் பணக்காரர்கள் வந்து செலுத்தி கொள்வதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. மரணம் என்பது இயற்கையான ஒன்று என்பதை யாராலும் மறுக்க ம... மேலும் பார்க்க

Train Hijack: 'அப்பாவுக்காக; விளம்பரத்துக்காக' - இந்தியாவில் நடந்த சில ரயில் கடத்தல்களின் பின்னணி

கடந்த இரண்டு நாள்களாக பாகிஸ்தான், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் கவனம் பெற்ற சம்பவங்களில் ஒன்று பாகிஸ்தான் பயணிகள் ரயில் கடத்தல். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று முன்தி... மேலும் பார்க்க

X தொழில்நுட்ப பிரச்னை: ``இதுவரை இல்லாத அளவுக்கு சைபர் தாக்குதல்...'' - எலான் மஸ்க் சொல்லும் காரணம்

நேற்று மதியம் முதலே எக்ஸ் தளம் மிகவும் மெதுவாகத் தான் வேலை செய்து வருகிறது. இதுக்குறித்து ப்ளூ டிக் கொண்ட டாஜ் டிசைனர் என்ற எக்ஸ் வலைதள பக்கத்தில், "முதலில் DOGE-க்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. ப... மேலும் பார்க்க

Vikraman: 'அன்னைக்கு இரவு நடந்தது இதுதான், தேவையில்லாமல்...' - பிக்பாஸ் விக்ரமன் மனைவி கூறுவதென்ன?

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் விக்ரமன். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் விக்ரமன் பெயர் புதிய சர்ச்சையில் ஒன்றில் பேசப்படுக... மேலும் பார்க்க

மும்பை: ரயிலில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணை மீட்டு உயிரை காப்பாற்றிய ரயில்வே போலீஸார்..!

மும்பையில் புறநகர் ரயில்கள் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. காலை, மாலை நேரங்களில் புறநகர் ரயிலில் பயணிகள் ஏறி இறங்க மிகவும் போராட வேண்டியிருக்கும். ரயில் நிலையத்தில் சில நொடிகள் மட்டுமே நிற்கும் ரயி... மேலும் பார்க்க