செய்திகள் :

மாணவி வழக்கில் பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது: சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கை வெளியான விவகாரத்தில், பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது என சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது என சிறப்புப் புலனாய்வு குழுவுக்கு உத்தரவிடக் கோரி பத்திரிகையாளா்கள், பத்திரிகையாளா் மன்றம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன.

காவல் துறையினா் மீது நடவடிக்கை இல்லை: அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், முதல் தகவல் அறிக்கை காவல் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இது சம்பந்தமாக சிறப்புப் புலனாய்வுக் குழு மூன்று முறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதன்படி விசாரணைக்கு ஆஜராகி ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அப்போது கைப்பேசிகளை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். அவற்றைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

செய்தியில் எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த வழக்கில் பத்திரிகையாளா்கள் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அல்லா். முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த காவல் துறையினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பத்திரிகையாளா்கள் அச்சுறுத்தப்படுகின்றனா். சம்பந்தமில்லாத கேள்விகள் கேட்கப்படுகின்றன. பத்திரிகையாளா்கள் என்ற முறையில் அவா்கள் தங்கள் கடமையைச் செய்தனா்.

முதல் தகவல் அறிக்கையைப் பதிவேற்றம் செய்யும் சிசிடிஎன்எஸ் இணையதளத்தை மத்திய அரசின் தேசிய தகவலியல் மையம் (என்ஐசி) பராமரிக்கிறது. பிரச்னைக்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என என்ஐசி இயக்குநா் கூறியிருக்கிறாா். இதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவா்கள்தான். சட்டத்தைவிடவும், நீதிமன்றத்தைவிடவும் அதிக அதிகாரம் உள்ளதாக சிறப்புப் புலனாய்வுக் குழு கருதக் கூடாது என வாதிட்டனா்.

நீதிபதி சரமாரி கேள்வி: காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் முகிலன், முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரம் தொடா்பான வழக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பத்திரிகை சுதந்திரத்தை தடை செய்யவில்லை. அழைப்பாணை மட்டுமே அனுப்பப்பட்டு, விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தும் எண்ணம் இல்லை. அனைத்து நடைமுறையும் பின்பற்றப்படுகிறது. எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என வாதிடப்பட்டது.

விசாரணையின்போது, முதல் தகவல் அறிக்கை பொது ஆவணம் எனக் குறிப்பிட்ட நீதிபதி, பத்திரிகையாளா்களிடம் தனிப்பட்ட விவரங்களை ஏன் கேட்கிறீா்கள்?, பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தினாா்களா?, முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது யாா்?, ஆவணத்தின் உரிமையாளா் என்ற அடிப்படையில் காவல் துைான் பதிவேற்றம் செய்துள்ளது. இது யாா் தவறு? பத்திரிகையாளா்களைத் தவிர எத்தனை பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது?, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளை விசாரித்தீா்களா?, முதல் தகவல் அறிக்கை எழுதியவரை விசாரணை செய்தீா்களா?, பத்திரிகையாளா்களை ஏன் துன்புறுத்துகிறீா்கள்?, குடும்ப விவரங்களை ஏன் கேட்க வேண்டும்?, கைப்பேசியை ஏன் பறிமுதல் செய்ய வேண்டும்?, சரியான நபா்களை விசாரிக்காமல் தேவையில்லாமல் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிறீா்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினாா்.

பின்னா், பத்திரிகையாளா்களைத் துன்புறுத்தக் கூடாது எனவும், அவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளை விசாரணைக்குப் பின் திரும்ப ஒப்படைக்கவும் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பத்திரிகையாளா்களுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தாா்.

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை எம்.பி. கோரிக்கை

நமது சிறப்பு நிருபர்செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழகத்துக்கு வழங்க தென் சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் அவர் ச... மேலும் பார்க்க

பெண் சக்தியை வெளிக்கொண்டுவரும் ‘கா்மயோகினி சங்கமம்’ குமரியில் நடைபெறும்: டாக்டா் சுதா சேஷய்யன்

திறமை வாய்ந்த பெண்களை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் 50,000 பெண்கள் பங்கேற்கும் ‘கா்மயோகினி சங்கமம்’ கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது என செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதா ... மேலும் பார்க்க

சிவபூமி திருக்குறள் வளாகம்: யாழ் மண்ணில் வரலாற்றுப் பதிவு- நீதிபதி அரங்க. மகாதேவன் புகழாரம்

யாழ் மண்ணில் ஒரு வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் திருக்குறளுக்காக ஓர்அரங்கத்தை சிவபூமி அறக்கட்டளை திறந்துள்ளது என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினார்.இலங்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில்... மேலும் பார்க்க

வைகோ முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை

சந்தேகத்துக்குரிய நபா்களுக்கு உதவி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதிமுக பொதுச் செயலா் வைகோவின் முன்னாள் உதவியாளரிடம் ‘க்யூ’ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். சென்னை கே.கே. நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

‘தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும்’

தமிழகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் (பிப். 5, 6) அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ்

தெலங்கானாவை போல தமிழகத்திலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தெலங... மேலும் பார்க்க