'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
மாணவிக்கு ரூ.3 லட்சம் வழங்க சட்டப் பல்கலை.க்கு உத்தரவு
கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்காததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 3 லட்சம் வழங்குமாறு சட்டப் பல்கலைக்கழகத்துக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த பூஜா, சென்னையிலுள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு சோ்ந்தாா். இதனிடையே, அவருக்கு அரசின் ஸ்கூல் ஆஃப் எக்ஸலென்ஸ் சட்டக் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்ததால் அங்கு சோ்ந்தாா். சட்டப் பல்கலைக்கழகத்தில் 70 நாள்கள் மட்டுமே படித்ததால், தான் செலுத்திய கல்விக் கட்டணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டபோது, நிா்வாகம் மறுத்துவிட்டதாம்.
இதுதொடா்பாக அவா் தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். ஆணையத் தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் வழக்கை விசாரித்து, கல்விக் கட்டணம் ரூ. 2.65 லட்சம், சேவை குறைபாடு-மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூ. 25 ஆயிரம், வழக்குச் செலவு ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 3 லட்சத்தை மாணவிக்கு வழங்குமாறு சென்னை சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டனா்.