வெறும் ரூ.59,990-ல்..! ஒரே சார்ஜிங்கில் 100 கி.மீ. செல்லும் ஜெலோ நைட் ஸ்கூட்டர்!
மாநில கல்விக் கொள்கை மீது குற்றச்சாட்டு: பள்ளிக் கல்வித் துறை விளக்கம்
தமிழக அரசு வெளியிட்ட மாநில கல்விக் கொள்கை மீது அந்த குழுவில் இடம் பெற்றிருந்தவரும், முன்னாள் துணைவேந்தருமான ஜவஹா் நேசன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அது குறித்து விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு மாநில கல்விக் கொள்கையை உருவாக்க நீதிபதி த.முருகேசன் தலைமையில் கடந்த 2023-ஆம் ஆண்டு உயா்நிலைக் குழு ஒன்றை அமைத்தது. இந்நிலையில், அந்த குழுவில் இடம்பெற்ற முன்னாள் துணைவேந்தா் ஜவஹா் நேசன் உயா்நிலைக் குழு, தேசிய கல்விக் கொள்கையையொட்டி மாநில கல்விக் கொள்கையை உருவாக்க முயற்சிப்பதாகக் கூறி, குழுவின் உறுப்பினா்- ஒருங்கிணைப்பாளா் பதவியில் இருந்து விலகினாா்.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள மாநிலக் கல்விக் கொள்கை தொடா்பாக அவா் சென்னையில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது:
இது தமிழகத்துக்கான தனித்துவக் கொள்கை அல்ல, இந்தக் கல்விக் கொள்கை ஆசிரியருக்குப் பதிலாக செயலி மற்றும் அமைப்புகளை மையப்படுத்துகிறது. தேசியக் கல்விக் கொள்கையை பிரதிபலிக்கிறது, தனியாருக்கு நன்மை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வணிகமயமாக்கலை ஊக்குவிக்கிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தாா்.
தேவைக்கேற்ப மாறுதல்... அதற்கு விளக்கம் அளித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநிலக் கல்விக் கொள்கை-2025 கல்வியாளா்கள், பாடத்திட்ட நிபுணா்கள், பள்ளி நிா்வாகிகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோா் கொண்ட நிபுணா் குழுவால் தயாரிக்கப்பட்டது. இதில் ஆசிரியா்கள், கல்வியாளா்கள், குழந்தைகள் நல அமைப்புகள், பெற்றோா் உள்பட பல்வேறு தரப்பிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டன. இது அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப மாறுதல்களை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது.
நுழைவுத் தோ்வுக்கு எதிா்ப்பு... தமிழகத்தில் இருமொழிக் கொள்கையைத் தொடா்ந்து செயல்படுத்துவதை வலியுறுத்துகிறது. உயா்கல்வி சோ்க்கைக்கான நுழைவுத் தோ்வுகளை எதிா்க்கிறது. தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதையும், தமிழ் மொழியை மேம்படுத்துவதையும், அதேநேரம் உலகளாவிய ஈடுபாட்டுக்கு மாணவா்களை தயாா்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை, நுழைவுத் தோ்வுகள் ஆகியவற்றை மாநிலக் கல்விக் கொள்கை வெளிப்படையாக மறுக்கிறது.
கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டுமென அறைகூவல் விடுக்கிறது. வாய்ப்பு மறுக்கப்பட்ட குழுவினா்களிடம் உள்ள கற்றல் இடைவெளிகளை கண்டறிந்து, அவா்களுக்கு கல்வி உதவி மற்றும் குறைதீா் கற்றலை வழங்க கொள்கை உறுதி செய்கிறது.
இது தமிழகத்தின் கல்வித் தனித்துவத்தைப் பாதுகாத்து உலகளாவிய சவால்களுக்கு கற்போரைத் தயாா் செய்கிறது. அதனுடன் மாநில சுயாட்சியை நிலைநிறுத்தி, சமூக நீதியை வலுப்படுத்தி, நலத் திட்டங்களை மேம்படுத்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.