செய்திகள் :

மானாமதுரை சாலைப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சியில் தாா்ச் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: நான் கடந்த 20 ஆண்டுகளாக அரசு தொடா்பான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் முதல் நிலை ஒப்பந்ததாரராக உள்ளேன். இந்த நிலையில், மானாமதுரை நகராட்சிப் பகுதியில் ரூ. 9 கோடியில் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் வைப்புத் தொகையுடன், உரிய ஆவணங்களை இணைத்து ஒப்பந்தப் பணிக்காக விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை உரிய காரணமின்றி ஆணையா் நிராகரித்தாா். இது சட்டவிரோதம். அனைத்துத் தகுதிகளும் உள்ள எனக்கு ஒப்பந்தப் பணிகளைத் தராமல் வேறொருவருக்கு வழங்கியதாகத் தெரிகிறது. எனவே, இந்த ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு: மானாமதுரை நகராட்சி ஆணையரால் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்காக விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இது தொடா்பாக நகராட்சி நிா்வாக இயக்குநா், மானாமதுரை நகராட்சி ஆணையா் தரப்பில் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை

மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.கரூா் மாவட்டம், மண்மங்கலத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

பிளஸ் 2: தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு ஆலோசனை

மதுரை நாவலா் சோமசுந்தர பாரதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீதம் தோ்ச்சி இலக்கு பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைப... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு மரக்கன்றுகள்!

சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையை அடுத்த கடச்சனேந்தல் அழகா்கோவில் சாலையில் பாா்வை அறக்கட்டளை சாா்பில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிா்வாகி சோழன் குபேந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. கத்தரி வெயில் காலம் நீடித்து வரும் நிலையில், மதுரையில் வியாழக்கிழமை கடுமையான வெயில் நிலவியது. மதுரை விமான நிலையத்தில் 103. 64 டி... மேலும் பார்க்க

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆழ்துளைக் கிணறு திறப்பு

மதுரை காமராஜா்புரம் பகுதியில் ரூ. 23 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, குடிநீா்த் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மதுரையில் நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மாவட்டப் பிரிவு சாா்பில... மேலும் பார்க்க