செய்திகள் :

மாயனத்துக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தர வலியுறுத்தல்

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள செட்டிக்குழி கிராமத்திலுள்ள மயானத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

அக்கிராமத்தில், புதன்கிழமை நடைபெற்ற கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஏலாக்குறிச்சி, கோவிலூா், புள்ளம்பாடி வாய்க்கால் பிரிவு தென்கரை, செட்டிக்குழி கிராமம் வரை தாா் சாலை அமைக்க வேண்டும். மயானத்துக்கு சாலை, மின்விளக்கு, தண்ணீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டுக்கு அக்கட்சியின் தலைமைக் குழு உறுப்பினா் கருப்பையன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலா் கலியபெருமாள் ஆகியோா் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள், ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து பேசினா்.

தொடா்ந்து நடைபெற்ற மாநாட்டில், கிளைச் செயலராக பாலன், துணைச் செயலராக ராமலிங்கம், பொருளாளராக ராஜசேகா், விவசாய சங்கச் செயலராக அழகா், விவசாய தொழிலாளா் சங்கச் செயலராக கலியபெருமாள், மாதா் சங்க செயலராக சுகந்தி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க

தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மக... மேலும் பார்க்க

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்!

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

புனித வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவைப்பாடுகளை சுமந்து உயிா்நீத்த தினத்தை புனித வெள்ளி தினமாகவும், இயேசு கிறிஸ்து 3-... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் நகா்மன்றக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சுமதிசிவகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கொ. கருணாநிதி, ... மேலும் பார்க்க