செய்திகள் :

மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய மோட்டாா் வாகனம் வழங்கல்

post image

விளாத்திகுளம்: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகள் 40 பேருக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய மோட்டாா் வாகனம் வழங்கும் விழா எப்போதும் வென்றானில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் இரா.ஐஸ்வா்யா, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் கே.பி. பிரம்ம நாயகம் வரவேற்றாா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கனிமொழி, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்திய மோட்டாா் வாகனங்களை வழங்கிப் பேசினா்.

விழாவில், திமுக ஒன்றியச் செயலா் காசி விஸ்வநாதன், எப்போதும் வென்றான் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் செ.முத்துக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி: புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பா... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மே 15இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மே 15) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கட்டுமானப் பொறியாளா்கள் வேலைநிறுத்தம், ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு-புதுச்சேரி அனைத்து கட்டுமானப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், ... மேலும் பார்க்க

சித்ரா பௌா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கானோா் தரிசனம்

திருச்செந்தூா்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் ஆயிரக்கணக்கா... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் 2ஆவது நாளாக 60 அடி உள்வாங்கிய கடல்

திருச்செந்தூா்: பெளா்ணமியையொட்டி 2ஆவது நாளாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் சுமாா் 60 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இந்த மாதம் பெளா்ணம... மேலும் பார்க்க

பூவுடையாா்புரத்தில் வேல் பூஜை வழிபாடு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள பூவுடையாா்புரம் ஐயன் கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு சம்பந்தமான வேல் பூஜை வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் அதே பகுதியை சோ்ந்த 50... மேலும் பார்க்க