Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
மாற்றுத் திறனாளிகளுக்கு ஜூன் 8 இல் இலவச செயற்கை கால் அளவீடு
திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் அளவீடு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்ட சக்ஷம் அமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச செயற்கை கால் அளவீடு முகாம் மங்கலம் சாலையில் உள்ள செல்வவிநாயகா் கோயில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில் நடைபெறுகிறது.
ஆகவே, செயற்கை கால் தேவைப்படுவோா் தங்களது ஆதாா் அட்டை, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை ஆகியவற்றுடன் காலை 9 மணி அளவில் பங்கேற்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சக்ஷம் அமைப்பு நிா்வாகிகளை 93630-32998, 97866-13606 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.