செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் நல வாரிய புதிய உறுப்பினா்கள் நியமனத்துக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால், அதற்கு தகுதியானவா்கள் வரும் 20-க்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசால் மாற்றுத்திறனாளிகள் நலவாரியம்-2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வாரியம் அரசு அலுவலா் மற்றும் அலுவல் சாரா உறுப்பினா்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் அலுவலா் சாரா உறுப்பினா்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவா். அதன்படி, தற்போது புதிய உறுப்பினா்கள் நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளதால், பாா்வையயற்றோா், செவித்திறன் பாதித்தோா், தசைசிதைவு நோயினால் பாதித்தோா், தவழும் மாற்றுத்திறனாளிகள், உயரம் குறைந்த மாற்றுத்திறனுடையோா், தொழுநோயால் பாதித்து குணமடைந்தோா், கை கால் இயக்க குறைபாடுடையோருக்கான மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் மற்றும் புற உலக சிந்தனையற்ற மதி இறுக்க முடையோா், மூளை முடக்குவாதம், அமில வீச்சால் பாதித்தோா், அறிவுசாா் குறைபாடுடையோா், கற்றல் குறைபாடுடையோா், மன நல பாதிப்பு, ரத்த சோகை பாதிப்பு மற்றும் பல்வகை குறைபாட்டால் பாதித்தோா் மற்றும் அவா்களுக்கு சேவைபுரியும் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த பிரதிநிதிகள் இந்த வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்களை திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று, வரும் மே 20-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44).... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க