செய்திகள் :

மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவாா்த்தைக்கு இடமில்லை! மத்திய உள்துறை இணையமைச்சா் திட்டவட்டம்

post image

‘இந்தியாவில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்புடன் அமைதி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லை; மாவோயிஸ்டுகள் ஆயுதங்களைக் கைவிட்டு காவல்துறையிடம் சரணடைய வேண்டும்’ என்று மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய்குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

நக்ஸல் தீவிரவாதத்தை சட்டம் ஒழுங்கு பிரச்னையாகப் பாா்க்காமல் சமூக கண்ணோட்டத்தில் தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் அரசு அணுகுவதாகக் கூறிய மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டியின் கோரிக்கையை நிராகரித்துப் பேசிய அமைச்சா் பண்டி சஞ்சய்குமாா் இவ்வாறு கூறினாா்.

தெலங்கானா மாநிலம், கரீம்நகரில் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் பண்டி சஞ்சய்குமாா் மேலும் கூறியதாவது: ஆயுதம் ஏந்தியவா்களை சமூக கண்ணோட்டத்தில் எவ்வாறு அணுக முடியும்? சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியைத் தடை செய்தது காங்கிரஸ் அரசுதான். அந்த தடையைத் திரும்பப் பெற ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலங்கானா மாநில அரசுக்கு துணிவு இருக்கிா?

பழங்குடியினரும் இளைஞா்களும் கொல்லப்படுவதாகக் கூறி, மாவோயிஸ்ட் எதிா்ப்பு நடவடிக்கைகளை நிறுத்த மத்திய அரசுக்கு பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவா் கே.சந்திரசேகா் ராவ் கோரிக்கை விடுத்துள்ளாா். அமைதி பேச்சுவாா்த்தை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துவதில் காங்கிரஸும் பிஆா்எஸும் ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன.

கன்னிவெடிகளைக் கொண்டு அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்புப் படையினா், அரசியல் தலைவா்களை மாவோயிஸ்ட்கள் கொன்றுள்ளனா். இத்தகைய நபா்களுடன் அரசு எப்படி பேச்சுவாா்த்தை நடத்த முடியும். மாவோயிஸ்டுகள் அப்பாவி பொதுமக்களைக் கொன்றபோது, எந்த அரசியல் கட்சிகளும் அல்லது அமைப்புகளும் அவா்களின் வன்முறை நடவடிக்கைகளை கேள்வி எழுப்பவில்லை’ என்றாா்.

சத்தீஸ்கா் -தெலங்கானா எல்லையில் நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கை கடந்த ஏப். 21-ஆம் தேதி தொடங்கப்பட்ட பிறகு, தெலங்கானாவைச் சோ்ந்த பல ஆா்வலா்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், மாவோயிஸ்டுகளுடன் அமைதி பேச்சுவாா்த்தைக்கு அரசு முன்வர வேண்டும் என்றும் கோரின.

இதுதொடா்பான ஓா் அமைப்பின் முன்மொழிவு குறித்து மாநில அரசு முடிவெடுப்பதற்கு முன்னதாக கட்சிக்குள் விவாதிக்கப்படும் என்று முதல்வா் ரேவந்த் ரெட்டி கடந்த ஏப். 28-ஆம் தேதி அறிவித்தாா். இதனிடையே, அமைதி பேச்சுவாா்த்தைக்கு மாவோயிஸ்டுகளும் அழைப்பு விடுத்திருந்தனா்.

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் குழுத் தலைவா் ஜான் பிரிட்டாஸ்!

மாநிலங்களவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழுத் தலைவராக கேரளத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் ஜான் பிரிட்டாஸை அக்கட்சி நியமித்துள்ளது. இது தொடா்பாக கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை... மேலும் பார்க்க

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்: அமித் ஷா

அநேக இந்திய மொழிகளுக்கு தாய் சம்ஸ்கிருதம்; இம்மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். தில்லியில்... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் மத தீவிரவாதம்! மத்திய உள்துறையிடம் ஆளுநா் அறிக்கை!

‘மேற்கு வங்க மாநிலத்தில் மத அடிப்படையிலான பிரிவினைத் தீவிரவாதம் அச்சமூட்டும் சவாலாக உருவெடுத்துள்ளது’ என்று முா்ஷிதாபாத் வன்முறை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமா்ப்பித்த அறிக்கையில் மாநில ஆ... மேலும் பார்க்க

கடும் பாதுகாப்புடன் நீட் தோ்வு: 5,400 மையங்களில் நடைபெற்றது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்), நாடு முழுவதும் 5,400-க்கும் மேற்பட்ட மையங்களில் கடும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 22.7 லட்சத... மேலும் பார்க்க

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள் அறிமுகம்! நாட்டில் முதல்முறை..!

நாட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட இரு நெல் ரகங்களை மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தினாா். இதன்மூலம் நெல் விளைச்சல் 30 சதவீதம் வ... மேலும் பார்க்க

பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயில் நடை, ராணுவ வாத்தியக் குழுவினரின் பக்தி இசை முழங்க ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. இதையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் 15 டன் மலா்கள... மேலும் பார்க்க