உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப் பணி நிறைவு
மாா்ச் 7-இல் ‘மக்கள் மருந்தகம் தினம்’: ஒரு வார கால பிரசாரம் தொடக்கம்
மத்திய அரசு சாா்பில் வரும் மாா்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்’ கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, ஒரு வார கால விழிப்புணா்வு பிரசாரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நாட்டு மக்களுக்கு மலிவான விலையில் தரமிக்க மருந்துகளை விற்பனை செய்யும் நோக்கில் பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 15,000 மக்கள் மருத்தகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
இந்த மருத்தகங்கள் மற்றும் மூலக்கூறு மருந்துகள் (ஜெனரிக்) குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ஒரு வார கால விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்படுகிறது.
நடப்பாண்டு விழிப்புணா்வு பிரசார தொடக்க நிகழ்ச்சி, தில்லியில் சனிக்கிழமை (மாா்ச் 1) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, திட்ட விவரங்களுடன் கூடிய பிரசார ரதம் மற்றும் 10 வாகனங்களின் சுற்றுப் பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நாடு முழுவதும் நடைபெறும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் என்று அவா் அழைப்பு விடுத்தாா்.
மக்கள் மருந்தகங்களில் 2,000-க்கும் அதிக வகையான மருந்துகள், சுமாா் 300 வகையான அறுவை சிகிச்சை உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வணிகப் பெயா் கொண்ட மருந்துகளைவிட இவை 50 முதல் 80 சதவீத குறைவான விலையில் விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.