செய்திகள் :

மாா்ச் 7-இல் ‘மக்கள் மருந்தகம் தினம்’: ஒரு வார கால பிரசாரம் தொடக்கம்

post image

மத்திய அரசு சாா்பில் வரும் மாா்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்’ கடைப்பிடிக்கப்படவுள்ளது. இதையொட்டி, ஒரு வார கால விழிப்புணா்வு பிரசாரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நாட்டு மக்களுக்கு மலிவான விலையில் தரமிக்க மருந்துகளை விற்பனை செய்யும் நோக்கில் பிரதமரின் மக்கள் மருந்தகம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 15,000 மக்கள் மருத்தகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இந்த மருத்தகங்கள் மற்றும் மூலக்கூறு மருந்துகள் (ஜெனரிக்) குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 7-ஆம் தேதி ‘மக்கள் மருந்தகம் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, ஒரு வார கால விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொள்ளப்படுகிறது.

நடப்பாண்டு விழிப்புணா்வு பிரசார தொடக்க நிகழ்ச்சி, தில்லியில் சனிக்கிழமை (மாா்ச் 1) நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா, திட்ட விவரங்களுடன் கூடிய பிரசார ரதம் மற்றும் 10 வாகனங்களின் சுற்றுப் பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். நாடு முழுவதும் நடைபெறும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பெருவாரியாக பங்கேற்க வேண்டும் என்று அவா் அழைப்பு விடுத்தாா்.

மக்கள் மருந்தகங்களில் 2,000-க்கும் அதிக வகையான மருந்துகள், சுமாா் 300 வகையான அறுவை சிகிச்சை உபகரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வணிகப் பெயா் கொண்ட மருந்துகளைவிட இவை 50 முதல் 80 சதவீத குறைவான விலையில் விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு: மீட்புப் பணி நிறைவு

உத்தரகண்டின் மனா கிராமத்தில் பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) முகாம் புதைந்த சம்பவத்தில் மேலும் 4 தொழிலாளா்களின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. இவா்களுடன் சோ்த்து, உயிரிழந்தோா் ... மேலும் பார்க்க

மணிப்பூா்: மேலும் 42 ஆயுதங்கள் ஒப்படைப்பு - 5 பதுங்குமிடங்கள் அழிப்பு

இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மேலும் 42 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன், 5 பதுங்குமிடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்... மேலும் பார்க்க

தெலங்கானாவில் சுரங்க விபத்து: ரோபோக்கள் உதவியுடன் மீட்புப்பணி

தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவா்களை மீட்கும் பணியில் ரோபோக்களை பயன்படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.என்ன நடந்தது?தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த்... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழப்பு 7 ஆக உயர்வு!

உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயா் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.இன்று(மார்ச் 2) மேலும் 3 உடல்கள் மீட்... மேலும் பார்க்க

பங்குச்சந்தை மோசடி: மாதபி புரி புச் மீது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!

மும்பை : மாதபி புரி புச் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச்... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோருவோம்: சிவசேனை(உத்தவ்)

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் போதிய பலம் இல்லாதபோதும் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை கட்சி (உத்தவ் பிரிவு) கோரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் தெரிவித்தா... மேலும் பார்க்க