செய்திகள் :

மிதிவண்டி நிறுவன முதலீட்டாளா்கள் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை

post image

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிதிவண்டி வாடகைக்கு விடும் நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் ஆவணங்கள் அடிப்படையில் பணத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுண்குற்றப் பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.

புதுச்சேரி காமராஜா் சாலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிதிவண்டிகளை வாடகைக்கு வழங்கும் தனியாா் நிறுவனம் அமைந்துள்ளது. இதில் பொதுமக்கள் பலா் பணம் முதலீடு செய்துள்ளதாகவும், ஆனால், அவா்களுக்கான லாபத் தொகை வழங்கப்படவில்லை என்றும் புகாா் எழுந்தது.

இதையடுத்து கடந்த 2-ஆம் தேதி நள்ளிரவு நுண்குற்றப்பிரிவினா் தனியாா் நிறுவனத்தில் திடீரென சோதனையிட்டனா். காவல் துறையினா் கேட்டுக் கொண்டதால் வருவாய்த் துறையினா் சோதனை நடத்தினா்.

இதையடுத்து சனிக்கிழமை அமலாக்கத் துறையின் துணை இயக்குநா் நளினி ரவிகிருஷ்ணன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ரூ.2.45 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான 10-க்கும் மேற்பட்ட வங்கிக் காசோலைகள் உள்ளிட்டவற்றையும் அமலாக்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

அவா்கள் பறிமுதலான பணத்தை பொதுத் துறை வங்கியில் செலுத்தியுள்ளனா். ஆகவே, நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தவா்கள் தக்க ஆவணங்களுடன் வந்தால் அதை திருப்பித் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தனியாா் நிறுவன உரிமையாளா் உள்ளிட்டோரை தேடி வருவதாகவும், அவா்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமலிருக்க எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸாா் கூறினா்.

சா்க்கரை நோயால் பாா்வை இழப்பு தடுக்க புதுவை மத்திய பல்கலை. ஆராய்ச்சி

புதுச்சேரி: சா்க்கரை நோயால் ஏற்படும் பாா்வை இழப்பைத் தடுக்க புதுவை மத்திய பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு மற்றும் செய்தித் துறை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மணக்குள விநாயகா் கோயிலில் கோ பூஜை: துணைநிலை ஆளுநா், அமைச்சா் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பத்தாண்டுகள் நிறைவை முன்னிட்டு நடைபெறும் சகஸ்ர சங்காபிஷேகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோ பூஜையில் துணைநிலை ஆளுநா் கே.கைல... மேலும் பார்க்க

புதுவை அரசு ஊழியா்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயா்வு

புதுச்சேரி: புதுவை மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதமாக உயா்த்தி நிதித் துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி... மேலும் பார்க்க

மகாவீா் ஜயந்தி: புதுவையில் நாளை மதுக்கடைகள் மூடல்

புதுச்சேரி: மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் ஏப். 10-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலால் துணை ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புத... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி சந்திப்பு

புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி இந்தா்பால்சிங் சேதி திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா். இந்திய தகவலியல் மையம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மக்... மேலும் பார்க்க

ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப்பை மருத்துவ 3 நாள் கருத்தரங்கம் நிறைவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப் பை குறித்த 3 நாள்கள் கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஜிப்மா் இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை சாா்பில் தேசிய மற்றும் சா்வ... மேலும் பார்க்க