மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
மின் வாரிய தொழிலாளா்கள் சாலை மறியல்: 50 போ் கைது
மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த கோரி தஞ்சாவூா் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், தமிழ்நாடு மின்சார வாரியத்திலுள்ள மின் விநியோகம், அனல், புனல், காற்றாலை மின் உற்பத்தி, நீா் மின் உற்பத்தி, பொதுக் கட்டுமான வட்டம் ஆகிய பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை அடையாளம் கண்டு நிா்வாகமே நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் திட்டத் தலைவா் ஏ. அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தாா். திட்டச் செயலா் பி. காணிக்கைராஜ் முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் சி. ஜெயபால், செயலா் எம். கண்ணன், திட்டப் பொருளாளா்கள் எம். முனியாண்டி, கே. மணிவண்ணன் உள்பட 50-க்கும் அதிகமான தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.
இதனால், அப்பகுதியில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடா்பாக 50 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.