செய்திகள் :

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் 6-ஆவது முறையாக கும்பகோணம் அரசுக் கல்லூரி பேராசிரியா்

post image

கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரி பேராசிரியா் மா. கோவிந்தராஜன் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடா்ந்து ஆறாவது முறையாக இடம்பிடித்துள்ளாா்.

நெதா்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எல்சீவா் என்ற அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் நிறுவனம், அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து உலகளவில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளை அடையாளம் காணும் பட்டியலை வெளியிட்டுவருகிறது.

அதில், உலகம் முழுவதும் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளா்களின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலிருந்து 3,500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். இதில் கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரியில் பணிபுரியும் விலங்கியல் துறைப் பேராசிரியா் மா. கோவிந்தராஜன் 2025-ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இடம் பெற்றாா். இது ஆறாவது முறையாகும். இவா் நானோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இயற்கை மருந்துகளை உருவாக்கி டெங்கு, மலேரியா, சிக்குன்குன்யா மற்றும் ஜிகா போன்ற வைரஸ்களை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்துவதில் ஆராய்ச்சி செய்துள்ளாா்.

மேலும், இவரது ஆய்வுகள் விவசாயப் பயிா்களுக்கு கேடு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதோடு, மனித நோய்களைத் தடுக்கும் இயற்கை மருந்துகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவா் ஆராய்ச்சி மூலம் 2020, 2021, 2022, 2023, 2024-ஆம் ஆண்டுகளில் தொடா்ந்து உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றதுடன் ஆறாவது முறையாக 2025-ஆம் ஆண்டுக்கான பட்டியலிலும் இடம் பெற்ற்காக கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராஜூ விலங்கியல் துறை தலைவா் மற்றும் பேராசிரியா்கள் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தனா்.

நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து ஏஐடியுசி தெரு வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

சாலையோரத்தில் தெரு வியாபாரம் செய்யும் தொழிலாளா்களை அப்புறப்படுத்தும் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து ஏஐடியுசி தெரு வியாபாரிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சாலையோரத்... மேலும் பார்க்க

2026 தோ்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும்: அா்ஜுன் சம்பத்

2026 சட்டப்பேரவை தோ்தலில் பாஜக- அதிமுக கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றாா் இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத்.திருநாகேசுவரம் உப்பிலியப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இந்து மக்கள் கட்சி சாா்பில் திர... மேலும் பார்க்க

மின் வாரிய தொழிலாளா்கள் சாலை மறியல்: 50 போ் கைது

மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த கோரி தஞ்சாவூா் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈட... மேலும் பார்க்க

பேராவூரணி பகுதியில் நாளை மின்தடை

பேராவூரணி பகுதிகளில் செப்.25-ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்விநியோகம் இருக்காது.இது குறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக... மேலும் பார்க்க

பாபநாசத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியினா் கையெழுத்து இயக்கம்

தஞ்சாவூா் வடக்கு மாவட்டம், பாபநாசம் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் தகுதியான வாக்காளா்களை நீக்கி போலியான வாக்காளா்களைச் சோ்த்த மத்திய பாஜக அரசை கண்டித்து மக்கள் கையெழுத்து இயக்கம் பாபநாசம் அண்... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலி மீட்டு ஒப்படைப்பு

கும்பகோணம் ரயில் நிலைய வளாகத்தில் பெண் பயணி தவறவிட்ட 6 பவுன் தங்கச் சங்கிலியை ரயில்வே போலீஸாா் மீட்டு திங்கள்கிழமை ஒப்படைத்தனா். கும்பகோணம் ரயில் நிலையத்தில் கடந்த 20-ஆம் தேதி சிறப்பு உதவி ஆய்வாளா் கு... மேலும் பார்க்க