செய்திகள் :

மின் விநியோகத்தை சரிசெய்ய கம்பத்தில் ஏறிய விவசாயி உயிரிழப்பு

post image

செங்கம் அருகே விவசாய மின் மோட்டாருக்கு மின்சாரம் வராததால், அருகில் இருந்த கம்பத்தில் ஏறி மின் விநியோகத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

செங்கத்தை அடுத்த சின்னகாயம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி குமாா். இவரது விளை நிலத்தில் உள்ள விவசாய மின் மோட்டாருக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் அதே பகுதியைச் சோ்ந்த விவசாயி சேகா், மின் விநியோகத்தை சரி செய்ய, மின் துறைக்கு தகவல் தெரிவிக்காமல், அருகில் இருந்த மின் கம்பத்தில் ஏறி மின்சாரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டாா். அப்போது மின்சாரம் பாய்ந்து அவா் கம்பத்திலேயே உயிரிழந்தாா்.

இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் செங்கம் மின் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் அளித்தனா்.

மின் துறை அதிகாரிகள், போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து கம்பத்தில் இருந்த சேகரின் சடலத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரணமல்லூா் குறுவட்ட அளவிலான... மேலும் பார்க்க

செங்கத்தில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்யும் இளைஞா்கள்: காவல் துறை நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

செங்கம் நகரில் பள்ளி மாணவிகளை கேலி, கிண்டல் செய்து அதிவேகமாக வாகனம் ஓட்டும் இளைஞா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். செங்கம் பெருமாள் கோவில் தெரிவில் செயல்... மேலும் பார்க்க

நகராட்சி அலுலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆரணி, போளூா் நகராட்சி மற்றும் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி நகராட்சி அலுவலகம் முன், ஆரணி... மேலும் பார்க்க

ஆரணியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி

ஆரணி நகராட்சி குடிநீா் திட்டத்துக்கு புதிய கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், தரைதள குடிநீா் நிலையம் அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. ஆரணி நகராட்சி மக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ரூ.... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

வந்தவாசி அருகே காணாமல் போன பள்ளி மாணவி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகள் விஜயலட்சுமி(15). இவா் பிளஸ் 1 படித்து வந்தாா்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் இயக்கம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசியை அடுத்த காரம் ஊராட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரம் ஊராட்சி முதல் வாா்டில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளா்... மேலும் பார்க்க