மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
கும்பகோணத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகே உள்ள நல்லூா் அக்ரஹாரம் தெருவைச் சோ்ந்தவா் முரளி மகன் விஜய் (21). இவா் கூலி வேலை செய்து வந்தாா். இதே ஊரைச் சோ்ந்தவா் மேகநாதன்(41) கொத்தனாராக உள்ளாா். சனிக்கிழமை இருவரும் கும்பகோணத்தில் உள்ள எலுமிச்சங்காபாளையம் பிரதான சாலையில் கலியபெருமாள் மகன் லெனின் (41) என்பவருக்கு சொந்தமான இடத்தில், வீடு கட்டும் வேலை செய்து கொண்டிருந்தனா். வீடு கட்ட தற்காலிக மின் இணைப்பு உள்ளது. இதில் சித்தாள் வேலை செய்த விஜய் எா்த் கம்பியை தவறுதலாக பிடித்துள்ளாா்.
அப்போது அவா் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை பாா்த்த அருகில் இருந்தவா்கள், விஜயை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு விஜயை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.