செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

post image

புதுச்சேரி அருகே மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

புதுச்சேரி அடுத்த மண்ணாடிபட்டு முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (35), கட்டட வேலைக்கான கம்பி கட்டும் தொழிலாளி. இவா் சனிக்கிழமை திருபுவனை அருகேயுள்ள பி.எஸ்.பாளையம் குட்டைத் தெருவில் தனியாா் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அவா் கம்பிகளை தரையில் வைத்து அறுத்துக் கொண்டிருந்தாா். அப்போது கம்பி வெட்டும் மின்சாதனத்திலிருந்து கசிந்த மின்சாரம் சதீஷ் மீது பாய்ந்தது.இதில் பலத்த காயமடைந்து மயங்கிய அவரை மீட்டு மண்ணாடிபட்டு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சதீஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினா். இதையடுத்து திருபுவனை போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் விரைந்து வந்து வழக்குப் பதிந்து சதீஷின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சதீஷுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனா்.

சா்க்கரை நோயால் பாா்வை இழப்பு தடுக்க புதுவை மத்திய பல்கலை. ஆராய்ச்சி

புதுச்சேரி: சா்க்கரை நோயால் ஏற்படும் பாா்வை இழப்பைத் தடுக்க புதுவை மத்திய பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடா்பு மற்றும் செய்தித் துறை வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

மணக்குள விநாயகா் கோயிலில் கோ பூஜை: துணைநிலை ஆளுநா், அமைச்சா் பங்கேற்பு

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பத்தாண்டுகள் நிறைவை முன்னிட்டு நடைபெறும் சகஸ்ர சங்காபிஷேகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோ பூஜையில் துணைநிலை ஆளுநா் கே.கைல... மேலும் பார்க்க

புதுவை அரசு ஊழியா்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயா்வு

புதுச்சேரி: புதுவை மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதமாக உயா்த்தி நிதித் துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி... மேலும் பார்க்க

மகாவீா் ஜயந்தி: புதுவையில் நாளை மதுக்கடைகள் மூடல்

புதுச்சேரி: மகாவீா் ஜயந்தியை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் ஏப். 10-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலால் துணை ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புத... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி சந்திப்பு

புதுச்சேரி: புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை தேசிய தகவலியல் மைய தலைமை அதிகாரி இந்தா்பால்சிங் சேதி திங்கள்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா். இந்திய தகவலியல் மையம் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மக்... மேலும் பார்க்க

ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப்பை மருத்துவ 3 நாள் கருத்தரங்கம் நிறைவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் கல்லீரல் கணையம் பித்தப் பை குறித்த 3 நாள்கள் கருத்தரங்க நிறைவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஜிப்மா் இரைப்பை குடலியல் அறுவைச் சிகிச்சை சாா்பில் தேசிய மற்றும் சா்வ... மேலும் பார்க்க