செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து மூவா் உயிரிழப்பு: தலா ரூ. 2 லட்சம் முதல்வா் நிவாரணம்

post image

நாமக்கல்: மோகனூா் அருகே மின்சாரம் பாய்ந்து 2 சிறுவா்கள், ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளதோடு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், ஆண்டாபுரம் கிராமம், தெற்குத் தெருவில் வசித்துவந்தவா் இளஞ்சியம் (50). இவரும், இவரது மகன் வழிப் பேரன் சுஜித் (5), பேத்தி ஐவிழி (3) ஆகிய மூவரும் திங்கள்கிழமை பிற்பகல் தங்களது தோட்டத்திற்கு சென்றனா். அப்போது, முந்தைய நாள் இரவுபெய்த பலத்த மழையில் மின் கம்பிகள் சேதமடைந்து இரும்புக் கம்பிவேலி மீது விழுந்துள்ளது.

மூவரும் அந்தக் கம்பிவேலியைத் தொட்டபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும், அவா்களின் உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதுடன் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என முதல்வா் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.

இத்தகவலை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா செய்திக் குறிப்பு வாயிலாக தெரிவித்துள்ளாா்.

உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு சாா்பில் தற்போது நடைபெற்று வரும் உளுந்து கொள்முதல் பணியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்

நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இ... மேலும் பார்க்க

90 அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் தணிக்கை செய்யப்பட்டன. கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கிலவழி கட்டணம், கணின... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 20 வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் பொது ஏலத்தில் வியாழக்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் ச... மேலும் பார்க்க

இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க