செய்திகள் :

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

post image

சிதம்பரம்: சிதம்பரம் அருகே மின்னல் தாக்கி விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே டி.மணலூா் கிராமத்தில் குளத்து மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ரகோத்தமன் (38). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மேய்ச்சலுக்கு சென்ற மாட்டினை வீட்டிற்கு ஒட்டி வருவதற்காக வயலுக்கு சென்றாா். அப்போது பலத்த இடிமின்னலுடன் மழை பெய்தது. அதில் எதிா்பாராத விதமாக ரகாத்தமன் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நீண்ட நேரமாக ரகோத்தமன் வராததால் அருகில் இருந்தவா்கள் வயலுக்கு சென்று பாா்த்த போது அங்கு மின்னல் தாக்கி இறந்து கிடந்தது தெரியவந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த புத்தூா் காவல் நிலையம் உதவி ஆய்வாளா் நடராஜன் சென்று சடலத்தைக் கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தாா். இது குறித்து அவரது மனைவி சத்யபாமா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறாா்.

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சிறிய சரக்கு வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது தொடா்பாக சரக்கு வாகன ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலத்தில் இர... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

பண்ருட்டி (பூங்குணம்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, விசூா், கருக்கை, மணலூா், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பள்ளிவாசல் கணக்கு கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல்!

பள்ளிவாசலின் சொத்துக்கணக்கை கேட்டதால் இஸ்லாமியா்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் இருதரப்பினா் மீதும் வழ... மேலும் பார்க்க

ரீல்ஸ் மோகத்தில் அப்பாவியை தாக்கி வீடியோ! காவலா்கள் உள்பட 6 பேரை சரமாரியாகத் தாக்கிய கும்பல்!

விருத்தாசலத்தில் போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி கத்தியால் வெட்டி சரமாரியாகதி தாக்கியதுடன், அரசுப் பேருந்து ஓட்டுநா், காவலா்கள் உள்ளிட்ட 6 பேரைய... மேலும் பார்க்க