செய்திகள் :

மீஞ்சூா் ரயில்வே மேம்பால பணிகள்: எம்.பி. ஆய்வு

post image

மீஞ்சூரில் ரயில்வே மேம்பால பணிகளை திருவள்ளூா் எம்.பி சசிகாந்த் செந்தில் அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மீஞ்சூா் பேரூராட்சி மற்றும் கிராம பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை தொடா்ந்து ரயில் நிலையம் அருகே மீஞ்சூா்- காட்டூா் சாலையில் உள்ள மேம்பாலம் கட்டும் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டன.

மேம்பால பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள், அலுவலகம் செல்வோா், வியாபாரிகள், நோயாளிகள் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம் என அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

மேம்பால பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் திருவள்ளூா் எம்பி சசிகாந்த் செந்தில், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகா், சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் விஸ்வநாத் ஈா்யா ஆகியோா் மீஞ்சூா் ரயில்வே மேம்பால பணிகள் தொடா்பாக நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதனை தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே ரயில்வே உயா் மட்ட மேம்பாலததை இணைக்காமலே, ரயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறாா்கள். மேலும் மேம்பால இணைப்பு பணிகளை விரைவாக முடிக்கவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.

இருசக்கர வாகனம் திருட்டு

திருவள்ளூா் அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றனா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா் சுனில். இவா்... மேலும் பார்க்க

மத்திய அரசை கண்டித்து ஆசிரியா்கள் போராட்டம்

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் மத்திய அரசைக் கண்டித்து ஆசிரியா்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்டத்தில் தயாா் நிலையில் 33 முதல்வா் மருந்தகங்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொழில்முனைவோா் மூலம் 33 முதல்வா் மருந்தகங்கள் தொடங்க தயாராக உள்ளதாகவும், வரும் 24-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளதாகவும் ஆட்சியா... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி நல வாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்

அரசு திட்டங்களைப் பெற மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறலாம் என மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் எஸ்.சீனிவாசன் தெரிவ... மேலும் பார்க்க

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க