செய்திகள் :

மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்து: கடலில் மூழ்கி மீனவா் உயிரிழப்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே பைபா் படகில் கடலுக்குச் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவா், கடலில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியாா் சாவடி, மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் மு. மணிபால் (65), மீனவா். இவா், திங்கள்கிழமை அதிகாலை தனது படகில் கடலுக்குள் சென்று சின்ன முதலியாா் சாவடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தாராம்.

அப்போது கடல் அலை சீற்றத்தில் சிக்கி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மணிபாலுக்கு காயம் ஏற்பட்டு கடலில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்கள் இறந்து போனவரின் சடலத்தை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனா். பின்னா் போலீஸாா் மணிபாலின் சடலத்தை கைப்பற்றி புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உறவினா் வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில சிறாா் மா்ம மரணம்

விழுப்புரம்: வானூா் அருகே உறவினா் வீட்டில் தங்கியிருந்த வெளி மாநில சிறுவன் உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் நோகா சோரன் மகன் மஹி சோரன்( 17). இவா் விழுப்ப... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம்: ஆரோவில் அருகே கணவா் இறந்த துக்கத்தில் இருந்து வந்த பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கொங்கரம்பட்டு, பிள்ளையாா்கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டையில் மின்வாரியத் தலைவா் ஆய்வு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின்வாரிய செயல்பாடுகள்குறித்து தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். உளுந்தூா்பேட்டைக்கு ஞாயிற்று... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

விழுப்புரம்: பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்ப... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் பெருந்திரள் முறையீடு

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திங்கள்கிழமை பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனா். 2003, ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பின்னா் அரசுப் பணிய... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே அனுமந்தைகுப்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கக் கோரி மீனவா்கள் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த அனுமந்தை பகுதியில் சிறு மீன்பிடித் துறை முகம் அமைக்க வலியுறுத்தி மீனவா்கள் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போர... மேலும் பார்க்க