செய்திகள் :

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு!

post image

முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரையில் தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் சுமார் 3.05 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆக. 26 ஆம் தேதி சென்னையில் தொடங்கிவைக்கிறார்.

காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கிறார்.

இதற்காக திமுக எம்.பி. வில்சன் நேரில் சென்று பஞ்சாப் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் பக்கத்தில்,

"இந்தியாவுக்கே முன்னோடியாகவும், சர்வதேச அளவிலான தரத்துடனும் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்க விழாவிற்கு பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்கிறார்.

இன்று காலை விழா அதற்கான அழைப்பிதழை திமுக எம்.பி. வில்சன், பஞ்சாப் முதலமைச்சரிடம் நேரில் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் வரவேற்றார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சிறப்புமிகு திட்டமான காலை உணவுத் திட்டம் மூலம் அரசுப் பள்ளிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் வாயிலாக 17 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர்கள் சத்தான உணவுடன் கல்வி கற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் 26 அன்று இத்திட்டத்தினை நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைக்கிறது திமுக அரசு !

இந்த திட்டம் மூலம் இனி 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பசியின்றி பாடம் கற்கும் நிலையை உருவாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு" என்று பதிவிட்டுள்ளார்.

Punjab Chief Minister Bhagwant Mann has been invited as the special guest for the expansion ceremony of the Chief Minister's Breakfast Scheme.

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

கடந்த 3 சனிக்கிழமைகளில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்களில் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ஆகஸ்ட் 2 ... மேலும் பார்க்க

15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு

மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம்... மேலும் பார்க்க

மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட வேண்டும்- தமிழிசை

மழைநீர் வடிகால்களையும் சாலைகளையும் செவ்வனே செப்பனிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், இன்று தென் சென்... மேலும் பார்க்க

மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு: விஜய்

மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.மதுரை மாநாடு குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், மகோன்னதம் கொண்டு மனம் நிரம்பித் ததும்பி வழியும்... மேலும் பார்க்க

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிவு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 15,850 கன அடியிலிருந்து வினாடிக்கு 10,850 கன அடியாக சரிந்துள்ளது.அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வ... மேலும் பார்க்க

தவெக தொண்டர்கள் மறைவுக்கு விஜய் இரங்கல்!

தவெக மாநாட்டின்போது உயிரிழந்த தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, பாரபத்தியில் வியாழக்கிழமை(ஆக. 21) மாலை நடைபெற்றது. தவெக மாநா... மேலும் பார்க்க