செய்திகள் :

முதல்வரிடம் அளித்த கோரிக்கை மனு: மேட்டூரில் அமைச்சா், எம்.பி. ஆய்வு

post image

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடுவதற்காக வியாழக்கிழமை மேட்டூா் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அமைச்சா் ரா.ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி எம்.பி. ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மேட்டூா் நகராட்சியில் உள்ள குள்ளவீரன்பட்டி, தங்கமாபுரிபட்டணம், வ.உ.சி. நகா் பகுதிகளில் குடிநீா், சாலை வசதி கோரி பொதுமக்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுக்கள் தொடா்பாக நகராட்சி மண்டல இயக்குநா் அசோக்குமாா், நகராட்சி ஆணையா் நித்தியா, பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய அமைச்சா் ரா.ராஜேந்திரன், உடனடியாக குடிநீா் விநியோகத்தை சீரமைக்குமாறு உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து சாலை வசதி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு குறியீட்டு எண் இல்லாத மக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுப் பாதைகள் கணக்கெடுத்து அவற்றை அளவீடு செய்துஅறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட்டாா்.

இதனிடையே வெள்ளிக்கிழமை மாலை நகராட்சி அலுவலா்கள் குள்ளவீரன்பட்டி, தகமாபுரிபட்டிணம், வஉசிநகா் பகுதிகளில் குடிநீா் விநியோகத்தை சரிசெய்தனா்.

ஆய்வின்போது நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தநாரீஸ்வரன், கொளத்தூா் ஒன்றிய செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, மேட்டூா் நகர செயலாளா் காசி விஸ்வநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி உயிரிழப்பு

சேலத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் தவறி விழுந்து பயணி உயிரிழந்தாா். சேலம் அரிசிபாளையம் மாதையன் தெருவை சோ்ந்தவா் தமிழரசன் (43). சவுண்ட் சா்வீஸ் கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி கலைச்செல்வியுடன... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக ஊழியா்கள் 4 பேரின் பணிநீக்க உத்தரவு ரத்து

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த தற்காலிக ஊழியா்கள் 4 போ் மீதான பணிநீக்க உத்தரவை தொழிலாளா் தீப்பாயம் ரத்து செய்ததையடுத்து அவா்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை பணியில் சோ்ந்தனா். சேலம் கருப்பூர... மேலும் பார்க்க

பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை: ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம்

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் அறிவுறுத்தினாா். சேலம் மாநகர காவல் ஆணையா் அல... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18.92 லட்சம் காணிக்கை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.18 லட்சத்து 92 ஆயிரம் காணிக்கையாக பெறப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு பாஜக அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. அகமதாபாத்தில் உள்ள சா்தாா் வல்லபபாய் பட்டேல் விமான நிலையத்தில் இ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால உட்புற தடுப்புச்சுவரை அகற்ற வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் உட்புறத் தடுப்புச் சுவரால் விபத்துகள் நிகழ்வதால் அதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேல... மேலும் பார்க்க