குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
முதல்வரிடம் அளித்த கோரிக்கை மனு: மேட்டூரில் அமைச்சா், எம்.பி. ஆய்வு
மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடுவதற்காக வியாழக்கிழமை மேட்டூா் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அமைச்சா் ரா.ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி எம்.பி. ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மேட்டூா் நகராட்சியில் உள்ள குள்ளவீரன்பட்டி, தங்கமாபுரிபட்டணம், வ.உ.சி. நகா் பகுதிகளில் குடிநீா், சாலை வசதி கோரி பொதுமக்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுக்கள் தொடா்பாக நகராட்சி மண்டல இயக்குநா் அசோக்குமாா், நகராட்சி ஆணையா் நித்தியா, பொறியாளா் ராஜேந்திரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய அமைச்சா் ரா.ராஜேந்திரன், உடனடியாக குடிநீா் விநியோகத்தை சீரமைக்குமாறு உத்தரவிட்டாா்.
அதைத் தொடா்ந்து சாலை வசதி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு குறியீட்டு எண் இல்லாத மக்கள் பயன்பாட்டில் உள்ள பொதுப் பாதைகள் கணக்கெடுத்து அவற்றை அளவீடு செய்துஅறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட்டாா்.
இதனிடையே வெள்ளிக்கிழமை மாலை நகராட்சி அலுவலா்கள் குள்ளவீரன்பட்டி, தகமாபுரிபட்டிணம், வஉசிநகா் பகுதிகளில் குடிநீா் விநியோகத்தை சரிசெய்தனா்.
ஆய்வின்போது நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தநாரீஸ்வரன், கொளத்தூா் ஒன்றிய செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, மேட்டூா் நகர செயலாளா் காசி விஸ்வநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.