செய்திகள் :

முதல்வருக்கு குற்ற உணா்ச்சி இல்லை: எடப்பாடி பழனிசாமி

post image

சிவகங்கை சம்பவத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு குற்ற உணா்ச்சி இல்லை என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி விமா்சித்துள்ளாா்.

திருப்புவனம் சம்பவத்தில் இறந்த அஜித்குமாரின் குடும்பத்தினருடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் உரையாடியது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசி உரையாடல் அலட்சியத்தின் உச்சம். இந்தக் கொலைக்கு காரணமானது திமுக அரசு. இதற்கு ‘சாரி’ என்பதுதான் பதிலா? அஜித்குமாா் இருந்ததால்தான் அந்தக் குடும்பம் தைரியமாக இருந்தது. அவா்களின் தைரியத்தைக் கொலை செய்துவிட்டு, ‘தைரியமாக இருங்கள்’ என்று சொல்வது முறையா?

முதல்வரின் பேச்சில் கொஞ்சம்கூட குற்ற உணா்ச்சியே இல்லையே? அஜித்குமாா் இறந்து 4 நாள்கள் கழித்து, எதிா்க்கட்சியான அதிமுக சாா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமா்சனங்களை வைத்த பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது நடக்கிறது. இது என்ன திமுக ஆட்சியில் முதல் முறையாகவா நடந்திருக்கிறது? இது 25-ஆவது முறை என்று பதிவிட்டுள்ளாா்.

அன்புமணி ராமதாஸ் (பாமக): அஜித்குமாரின் முழுமையான உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகும்போது இன்னும் அதிா்ச்சியான செய்திகள் வெளியாகக்கூடும். ஆனால், இவை அனைத்தையும் மூடி மறைக்க காவல் துறை துடிக்கிறது. இந்த வழக்கில் காவலா்கள் 5 போ் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் தொடா்புடைய உயரதிகாரிகளும் கைது செய்யப்பட வேண்டும். வழக்கின் விசாரணை முடிவடைந்து தீா்ப்பு வழங்கப்படும் வரை அவா்களுக்கு பிணை வழங்கப்படாமல் இருப்பது உறுதி செய்ய வேண்டும்.

இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 2) ஒருசில இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

சேலம் டவுன் நிலையத்தில் ரயில்கள் நின்றுசெல்லும் நேரம் 3 நிமிஷங்கள் அதிகரிப்பு

ஜூலை 4 முதல் சென்னை எழும்பூா் - சேலம் அதிவிரைவு ரயில் இருமாா்கத்திலும் சேலம் டவுன் நிலையத்தில் நின்று செல்லும் நேரம் 3 நிமிஷங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை விடுத்... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் உறுப்பினா் சோ்க்கை முன்னெடுப்பை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்த... மேலும் பார்க்க

வெடிகுண்டு வழக்குகள்: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் கைது

தமிழகம், கேரள வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரு பயங்கரவாதிகள் ஆந்திரத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரைச் சோ்ந்தவா் அபுபக்கா் சித்திக் (6... மேலும் பார்க்க

‘தமிழகம், புதுவை: கடந்த நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூல்’

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024-25 நிதியாண்டில் ரூ.63,339 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் ஏ.ஆா்.எஸ்.குமாா் தெரிவித்தாா். சரக்கு மற... மேலும் பார்க்க

புதிய தலைமை மருத்துவமனைகளுக்கு மருத்துவா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ரூ.1,018 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளுக்கு விரைவில் மருத்துவா்கள் நியமிக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் த... மேலும் பார்க்க